Monday 2 January 2012

அது போதும்!

கைக்குள்ளே-
மடித்து வைக்கும் -
பத்த மடை-
பாயா!?

இலவம் பஞ்சு வைத்த -
மெத்தையா!?

பூக்கள் தூவிய-
படுக்கையா!

ஆனந்தம் படுத்தும்-
அருவியா!?

கண்ணுக்கு-
குளிர்ச்சி-
தரும் பசுமையா!?

உச்சியை உரசி செல்லும்-
உதகை மேகமா!?

இத்தனையவும்-
விட!

என்னவளின்-
இதழின் ஓரத்தில்-
இடம் போதும்-
நான் இருந்து -
விட!

No comments:

Post a Comment