Monday 31 December 2012

முகலாயர்களே....(23)

ஆட்சியாளராக-
இருந்த -
மன்னர்!

சிறைவாசியாக-
ஆனார்!

நாடு-
கடத்தப்பட்டார்!

ரங்கூனில்-
சிறைவைக்கபட்டார்!

தள்ளாத-
வயதிலும்-
தளர்த்திகொள்ளவில்லை-
துணிவை!

சிறைகம்பிகளுக்கு-
உணர்வுகள்-
இருக்குமானால்-
தானாக -
திறந்திருக்கும்-
கதவை!

ஆண்டுகள்-
கழிந்தது!

உடலின்-
நிலை-
பலவீனம்-
அடைந்தது!

பகதூர்ஷா-
கன்னங்களை-
ஈரமாக்கியது-
கண்ணீர் -
துளிகள்!

பார்ப்போம்-
அது-
என்ன -
காரணங்கள்!?

என் ஆட்சியையும்-
அதிகாரமும்-
எங்கே!?

பெற்ற பிள்ளைகள்-
எங்கே!?

பொன்னும்-
பொருளையும்-
எங்கே!?

மாட மாளிகைகள்-
எங்கே!?

மன்னிப்பு-
எழுதக்கூடிய-
காகிதங்கள்-
எங்கே!?

என்றெல்லாம்-
அழவில்லையே!!

என்னை-
புதைக்க-
என் தேசத்தில்-
கொஞ்சம் இடம்-
இல்லையா!?-என்பதை-
தவிர -
வேறில்லையே!

சிறையிலேயே-
இருந்தார்!

அதிலேயே-
இறந்தார்!

அந்தமான்-
சிறையில்-
இன்னொருவர்-
இருந்தார்!

உயிர் பிச்சை-
கேட்டு-
வெளியே-
வந்தார்!

காந்தி கொலை-
வழக்கில்-
முக்கிய-
குற்றவாளிகளில்-
ஒருவர்-
அவர்!

தேசத்தை-
துண்டாடும்-
"சிந்தாந்தத்தை"-
உருவாக்கிய-
ஊற்றுக்கண்களில்
ஒருவர்-
அவர்!

இவர்தான்-
இன்று காந்திக்கு-
அருகில்-
நாடாளுமன்றத்தில்-
புகைப்படமாக-
தொங்கி கொண்டிருக்கிறார்!

அவர்தான்-
வீர(!!!)சாவர்க்கர்!

பாவம்-
காந்தி-
உயிரோடு-
இருக்கையிலும்-
"துரத்தியவர்கள் !"

"படத்தை கூட"-
விடாமல்-
துரத்திகொண்டிருக்கிறார்கள்!

ஆம்-
நாம் "உண்மையை-"
மறக்கிறோம்!

"பொய்யை"-
தெரிந்தோ-
தெரியாமலோ-
ஏற்கிறோம்!

மன்னரின்-
உடலையாவது-
விட்டார்களா!?

ஆங்கிலேயர்கள்-
அவ்வளவு-
நல்லவர்களா!?

சொல்கிறேன்-
கொஞ்சம்-
பொறுத்து-
கொள்கிறீர்களா!?

(தொடரும்....)

குறிப்பு-பி ஜே பி ஆட்சிகாலத்தில்-
கலாம் அவர்களால்-நாடாளுமற்றதில் சாவர்க்கர்
புகைப்படம் திறக்கப்பட்டது)






Sunday 30 December 2012

முகலாயர்களே....(22)

"ஒண்ட வந்த-
பிடாரி-
ஊர் பிடாரியை-
விரட்டினது-
போல!

விழும் நிழல்களை-
தனக்கே-
சொந்தமென-
நிலங்கள்-
வாதிடுவது-
போல!

பசுமையோடு-
கலந்த-
மக்களை-
கொன்றுவிட்டு-
நிலத்தை-
அபகரித்து விட்டு-
பசுமை புரட்சின்னு-
சொல்வது-
போல!

ஜனங்களை-
பிணங்களாக்கி விட்டு-
ஜனநாயகத்திற்கு-என
சொல்வது-
போல!

பொழைக்க வந்த-
வெள்ளையர்கள்!

அடிமடியிலேயே-
கை வைத்தார்கள்!

வியாபாரம்-என
வந்து விட்டு!

நயவஞ்சகத்தால்-
மக்களை-
பிளந்து விட்டு!

தேச வளங்களை-
சுரண்டி கொண்டு!

மன்னரை-
கைது-
செய்வார்களாம்!

ராஜ துரோக-
வழக்கும்-
போடுவார்களாம்!

யாருக்கு-
யார் -
வழக்கு-
போடுவது!?

ராஜா பகதூர்ஷாதான்-
அவ்வழக்கை-
போடணும்-
அவர்களுக்கு!

மண்ணை-
ஆண்டவன்-
கைதியாம்!

வயிற்றை-
கழுவவந்தவன்-
நீதிபதியாம்!

மன்னருக்கு-
கொடுக்கப்பட்ட-
தண்டனை-
இல்லை-
அநியாயம்-
ஆயுள் தண்டனையாம்!

ஆங்கிலேயர்கள்-
செய்தது-
துரோகம்!
துரோகம்!
துரோகம்!

களங்கமில்லாமல்-
பகதூர்ஷா-
செய்தது-
தியாகம்!
தியாகம்!
தியாகம்!

அந்தோ-
பரிதாபம்-
மறந்து போனது-
அவரின்-
சமூகமும்!

நம்-
தேசமும்..!!

(தொடரும்.....)



Saturday 29 December 2012

முகலாயர்களே...(21)

கட்சியிலும்-
பங்கு!

ஆட்சியிலும்-
பங்கு!

இன்றைய-
அரசியல் -
தலைவர்களின்-
வாரிசுகளுக்கு!

கக்கூஸ்-
கட்டினாலும்!

பாதாள-
சாக்கடை-
கட்டினாலும்!

கமிசன்-
பங்கெடுக்குறான்-
ஒவ்வொரு ஆளும்!

காற்றலை-
ஊழலை-
ஊளையிடுறாங்க-
"கலாசார -
காவலர்கள்"!

"காவலர்களுக்கும்"-
பங்குள்ளதாக-
சி.பி.ஐ.தகவல்கள்!

குடும்பம்-
நடத்தவே-
பொண்டாட்டி-
இல்லை!

இதுல-
புள்ளைக்கு-
பேர்தேடுறவன்-
கதையா-
இல்ல!?

மின்  உற்பத்தி-
இல்லையின்னு-
சொல்றாங்க!

அப்ப-
என்னத்துக்கு-
இலவச மின் பொருட்கள்-
கொடுத்தாங்க!?

என்னமோ-
போங்க!?

இப்ப-
வரலாறுக்கு-
வாங்க!

தலைநகரில்-
புகுந்தது-
காட்டேரிகள்!

ரத்தங்களில்-
குளித்தும்-
அடங்கவில்லை-
வெறிகள்!

செங்கோட்டையை-
விட-
சிகப்பானது-
மணற்மேடுகள்!

சக்கரை-
மண்டியானது-
பள்ளிவாசல்கள்!

வாளுக்கு-
தீனியானார்கல்-
மன்னரின்-
உறவுகள்!

பிழைத்தது-
கடைசி-
இருவாரிசுகள்!

இருந்தார்-
மன்னர் -
சிறையில்-!

வருகிறது-
உணவைபோல்-
தாம்புல-
தட்டில்!

அதில்-
இருந்ததோ-
மன்னரின்-
இருமகன்களின்-
வெட்டப்பட்ட-
தலைகள்!

போராளிகள்-
இப்படிதான்-
காட்சியளிப்பார்கள்-என
கொக்கரித்து-
மன்னர்-
சிரித்தார்கள்!

நாட்டுக்காக-
அனைத்தையும்-
இழந்தார்கள்!

பொறுமை-
கொண்டார்கள்!

இவர்களா!?-
நாட்டின்-
துரோகிகள்!?
பாவிகள்!?

சுருக்கு கையிற்றை-
முத்தமிட்டு-
கிடைத்த -
சுதந்திரம்!

ஒரு சிலரிடம்-
மட்டும்-
சுருங்கிடவா!?-
அடைந்தோம்-
சுதந்திரம்..!!

(தொடரும்...)



Friday 28 December 2012

முகலாயர்களே...(20)

நிக்கல்சன்-எனும்
ராட்சசன்!

ஆங்கிலேய-
படையின்-
தளபதிகளில்-
ஒருவன்!

போகும்-
வழிகளில்-
பிணங்களில்-
தொங்கி-
 கொண்டிருந்தால்!

இவன்-
கடந்ததாக-
சொல்லும்-
மௌனத்தால்!

போய்கொண்டிருக்கிறான்-
டெல்லியை-
நோக்கி!

அவனுக்கு-
தெரிந்திருக்கவில்லை-
போவது-
மரணத்தை-
நோக்கி!

ஆனால்-
டெல்லியிலே!

பக்த்கான்-
மிர்சா முகல்-
தலைமையிலே!

ஆயத்தம்-
கொண்டிருந்தார்கள்-
பதுங்கு குழிகளிலே!

அடைத்துவிட்டனர்-ஆங்கிலேயர்கள்-
போராட்டகாரர்களுக்கு-
கிடைக்கும்-
உதவிகளின்-
வழிகளை!

போராளிகளோ-
மனம் தளரவில்லை!

பசி-
வயிறு-
விலா எலும்பை-
ஒட்டுவது-
போல!

தாகம்-
உள் நாக்கோடு-
பெரு நாக்கு-
ஒட்டியது-
போல!

லட்சியவேட்கையால்-
ஜொலித்தார்கள்-
நெருப்பில் இட்ட-
இரும்பை-
போல!

எதிரிப்படை-
வந்தது!

போராளிகள்-
"வலைக்குள்"-
சிக்கியது!

ஆம்-
நிக்கல்சனை-
இளம் ஆலிம்-
ஒருவரின்-
தோட்டா-
துளைத்தது!

இன்னொரு-
படைத்தளபதி-
வில்சனை-
ஆட்டம் கொள்ள -
செய்தது!

திரும்பி-
செல்ல -
நினைத்தவனை-
அவன்கூட-
வந்தவர்கள்-
அதிருப்தி-
நிலை கொள்ள-
செய்துவிட்டது!

புதிய கனரக-
ஆயுதங்கள் !

மேலும்-
படைபலங்கள்!

எதிரிகளை-
பலம் கொள்ள-
செய்தது!

நம் தேச தியாகிகளை-
உயிர் தியாகிகளாக-
மாற்றியது!

சமபலம்-
மோதிகொண்டால்-
போர்க்களம்!

பட்டினியான
மக்களோடு-
மோதுவது-
அடாவடித்தனம்!

அத்தியாகிகள்-
கொண்ட -
போரில் -
தோற்றிருக்கலாம் !

லட்சியத்தில்-(வீரமரணம்)
வென்றதால்-
மகிழ்ச்சி பாய்ந்திருக்கும்-
அவர்கள்-
மனமெல்லாம்!

இப்படியாக-
செத்தொழிந்த-
சமூகத்தினரின்-
இன்றையபெயர்கள் !!?

அச்சமூகத்தின்-
நிலைகள்!?

சொந்தங்களே!
நீங்களே!-
சிந்தியுங்கள்....!!?

(தொடரும்....)






Thursday 27 December 2012

முகலாயர்களே....(19)

தேனடையை-
சுவைக்கும்-
நாம்!

தேனீக்களின் -
உழைப்பை-
அறிந்தோமா!?

நதிகளை-
ரசிக்கும்-
நாம்!

அது-
கடந்து வந்த-
கரடுமுரடுகளை-
அறிந்தோமா!?

கவிதை-
வாசிக்கும்-
நாம்!

சிந்தனைகள்-
பிரசவிக்கும்-
வலிகளை-
உணர்ந்தோமா!?

கலை-
நயத்தில்-
லயிக்கும்-
நாம்!

லயிக்கும்போது-
நைந்த விரல்களை-
அறிவோமா!?

சொகுசான-
பயணங்கள்-
மேற்கொள்ளும்-
நாம்!

சாலையில்-
புதையுண்டிருக்கும்-
சரளை கற்களை-
அறிவோமா!?

பச்சிளம்-
குழந்தையை-
உச்சி முகர்ந்து-
முத்தமிடும்-
நாம்!

பேறுகாலத்தின்போது-
மரணத்தின் எல்லையை-
தொட்டு திரும்பும்-
தாய்மையை-
உணர்வோமா!?

புரட்சி-
புத்தகங்களை-
புரட்டி-
படிக்கும்-
நாம்!

அப்புரட்சியின்போது-
புரண்ட-
சில தளபதிகளை-
இன்று-
பார்ப்போமா!?

செங்குருதி-
சிந்தி-
செங்கோட்டையை-
காத்தவர்கள்!

ஆங்கிலேய-
படையை-
ஆட்டங்கான-
செய்தவர்கள்!

பக்த்கான்-
மௌலவி சர்ப்ராஜ் அலி-
போன்றவர்கள்!

இறக்கும்வரை-
போராடுவோம்!-என்று
சபதம்-
ஏற்றவர்கள்!

அச்சபதத்தை-
அடைந்தவர்கள்!

இரண்டாயிரம்-
போராளிகளுடன்-
இணைந்து-
போராட்டகளம்-
கண்டவர்கள்!

இத்தாத் அலிகான்-
மௌலவி நவ்ஜிஸ் அலி-
போன்றவர்கள்!

சதைகளும்-
ரத்த நாளங்களும்-
கொண்டது-
நம் உடலாகும்!

அந்த -
உடலை-
 கேடயமாக வைத்து -அடைந்ததே-
நம் சுதந்திரமாகும்!

சுதந்திரம்-
ஒவ்வொருவரின்-
பிறப்புரிமை!

அதனை-
பறிக்க-
யாருக்கும்-
இல்லை-
உரிமை...!!

(தொடரும்....)


Wednesday 26 December 2012

முகலாயர்களே...(18)

உலகை-
உலுக்கி-
உள்ளது-
போர்கள்!

பூமியை-
குளிக்க-
செய்திருக்கிறது-
குருதிகள்!

மண்ணை-
வெற்றி-
கொண்டால்!

அவ்வளங்களை-
கொள்ளை -
கொள்வதால்!

பெண்களை-
சொல்ல வாய்-
கூசும்-
"அளவுக்கு"-
நடப்பதால்!

சடலங்களால்-
மலை-
அமைப்பதால்!

இதனையே-
சாதனையாக-
எண்ணினார்கள்-
குரும்புத்தியால்!

இது-
மடமை காலம்!

படிப்பறிவில்லாத-
காலம்!

மனிதநேயம்-
மடிந்த காலம்!

எப்படியெல்லாம்-
முடியுமோ-
உங்களால்-
திட்டி கொள்ள-
கூடிய காலம்!


அதெல்லாம்-
உண்மைதாங்க!!

அக்காலம்-
கொடுமைதாங்க!?

இப்பமட்டும்-
என்ன-
"வாழுதுங்க"..!!?

பேருந்தில்-
ஒரு-
சகோதரி-
சீரழிக்கபட்டாள்!

ஒரு சில-
நாய்களால்-
குதறபட்டாள்!

மனிதநேயம் உள்ள-
அத்தனை பேரும்-
மன சஞ்சலத்தால்-
அலைக்கழிக்கபட்டார்கள்-
அச்சம்பவத்தால்!

இது போன்ற-
சம்பவங்கள்!

இதை விட-
கொடூரமானவைகள்!

நடந்திருக்கிறது-
நடந்துகொண்டுதான்-
இருக்கிறது!

யாருக்கோ-
நடக்கிறது!

நமக்கென்ன-
வந்தது!?

இப்படியாக-
நாமெல்லாம்-
இருந்தது!

இப்பொழுது-
தலை நகரை-
தலைகுனிய-
வைத்திட்டது!

குழந்தைகள்-
பெண்கள் இருக்கும்-
இடம்களில்-
அம்பு எய்தல்-
கூடாது!

இது-
நபிகளார்-
வாழ்வானது!

யுத்தங்களிலும்-
தத்துவம்-
சொன்னது!

எதிரிகளின்-
நாற்பத்திரண்டு-
பெண்கள்-
குழந்தைகள்-
சமயலறையில்-
ஒளித்து-
வைத்திருந்தார்!

பகதூர்ஷா-
மன்னர்!

உயிரைகாக்க-
இதனை-
செய்தார்!

எதிரிகளின்-
ரத்த உறவுகளை-
கூட-
நேசித்தார்!

தன்-
சிப்பாய்களை-
கட்டுபடுத்திடுவார்!

தேசமெங்கும் வந்த -
சிப்பாய்கள்!?

ஒளிந்து இருந்தவர்களை-
ஒளித்து கட்ட-
முனைந்தார்கள்!

மன்னரோ-
கலங்கி போய்-
நின்றார்கள்!

அவர்களின்-(ஒளிந்து இருந்தவர்கள்)
கொலைகளுக்கு பின்-
ஆறாத-
ரணங்களுடனே-
வாழ்ந்தார்கள்!

சொல்லுங்க-
அப்பேர்பட்ட-
ஆட்சியாளன்-
எங்கே!?

பிணங்களின் மேல்-
ஆட்சிகள்-
புரிகின்ற-
இன்றைய-
யோக்கியர்கள்!!-
எங்கே...!?

(தொடரும்....)




Tuesday 25 December 2012

முகலாயர்களே....(17)

மரம்-
வெட்ட -
தடையுண்டு!

மயிலை-
பிடிக்க-
தடையுண்டு!

மானை-
சுட-
தடையுண்டு!

மனிதனை-
வெட்டுவது-
சாதாரண-
நிகழ்வானது-
இன்று!

கங்கை-
யமுனை-
காவேரி-
ஆறுகளுக்கு-
பெண்களின்-
பேருண்டு!

பூமியை-
தாய்-
என்பவர்களும்-
உண்டு!

கடலை-
அம்மா -
என்பவர்களும்-
உண்டு!

மணிக்கு-
ஒரு-
கற்பழிப்பு-
வீதம்-
நடக்கிறது-
இன்று!

பயம்-
தீராமல்-
அணு உலை-
திறக்கப்பட-
மாட்டாது-என
பிரச்சாரம்-
சொன்னவர்கள்-
உண்டு!

லத்தியால்-
அடி கொடுத்து-
திறக்க-
 முனைகிறார்கள்-
இன்று!

சில்லறை-
வர்த்தகத்திற்கு-
மத்திக்கு-
ஆதரவு-
உண்டு!

மாநிலத்திற்கு-
எதிர்க்கிறார்கள்-
இன்று!

இருந்த-
இடத்தில-
பள்ளி கட்டி -
கொடுக்கப்படும்-
சொல்லிய -
கட்சி-
உண்டு!

அவர்கள்-
அமைத்த -
கமிசனையே-
மறந்தார்கள்-
இன்று!

மத கலவரங்கள்-
நடந்தி-
மனிதங்களை-
கொன்றவர்கள்-
உண்டு!

மத நல் இணக்கத்திற்கு-
உண்ணாவிரதம்-
இருப்பதாக-
கேலி பண்ணுகிறார்கள்-
இன்று!

இதெல்லாம்-
சொல்லபடுது-
அரசியல்-
சாணக்கியத்தனம்-
என்று!

சுதந்திர-
புரட்சியில்-
ஐந்தாவது-
மகன்-
மிர்சா முகல்-
வீர மரணம்-
அடைந்தது-
நம்மில் எத்தனை-
பேருக்கு-
தெரிந்த -
ஒன்று!?

இந்துக்களும்-
இஸ்லாமியர்களும்-
எனது இரு கண்கள்-என்று
பகதுர்ஷா-
சொன்னதை-
நம்மில் -
எத்தனை பேர்-
அறிந்த-
ஒன்று!?

இவர்களை-
வசைபாடவாவது-
யாருக்கு-
யோக்கியதை-
இருக்குது-
இன்று..!!?


(தொடரும்.....)





Monday 24 December 2012

முகலாயர்களே....(16)

அடி!-
அடி!-
அடி!

அடிக்கமாட்டேன்-
மனைவியை -என
சொல்லும்வரை-
அடி!

கொடுத்தது-
தந்தை-
பகதூர்ஷா!

வாங்கி-
கட்டியது-
ஒன்பதாவது-
மகன்-
மிர்சா!

எண்பதாயிரம்-
சிப்பாய்கள்-
சுதந்திரத்திற்காக-
குழுமிய -
தருணம்!

தியாக திருநாள்-(ஹஜ் பெருநாள்)
வரும் காலம்!

இரு சமூகங்களுக்கிடையே-
ஒரு-
மன சஞ்சலம்!

மாடு பலியிட-
போவதாகவும்!

அதை-
மாற்று மத சகோதரர்கள்-
வெறுப்பதாகவும்!

அறிந்தார்-
மன்னர்!

உத்தரவை-
பிறப்பித்தார்!

யாரும்-
மாடு பலியிட(குர்பானி)-
கூடாதென!

மீறினால்-
பீரங்கியில் வைத்து-
சுட்டுவிடுவேன்-
என!

அடி-
கொடுத்தார்-
பெண்ணுக்கு-
அடி-
விழுந்ததால்!

மனமாச்சர்யம்-
இல்லாமல் முடிவெடுத்தார்-
சமூகங்கள்-
பிளக்குமானால்!

வாள் எடுத்தார்-
பிறந்த மண்ணுக்கு-
"ஒன்றென்றால்"!

இம்மன்னரையும்-
மறைக்கலாமோ-
மத சாயத்தால்!!?

இன்று நாம்-
மறந்தோம்-
உயிர் தியாகிகளை!

நம்பி-
ஏமாறுகிறோம்-
போலிகளை!

அதில்-
ஒன்றானது!

இனி-
நான்-
சொல்லபோவது!

தேசம்-
நிறைந்துள்ளதாம்-
ஊழலாக!

எழுந்தால்-
ஒருவர்-
புயலாக!

ஆனார்-
அனைத்து -
பத்திரிக்கையிலும்-
தலைப்பு-
செய்திகளாக!

இப்போது-
ஆகி விட்டார்-
காணாமல்-
போன-
ஆளாக!!

நமக்கெல்லாம்-
தெரியும்-
அந்த-
"டெல்லி வாலா"!

போராட்டம்-
காண்கிறார்-
தனி ஒரு-
ஆளா!

உண்ணாவிரதம்-
இருக்கிறார்-
பன்னிரண்டு-
வருடங்களா!

மூக்கின் வழி-
செல்வதுதான்-
உடலுக்கு-
ஆகிறது-
ஆகாரங்களா!

ஒரே-
கோரிக்கை-
சிறப்பு அதிகார சட்டத்தை-
மாற்ற மாட்டார்களா!?

நம்மில்-
எத்தனை பேர்-
அறிவோம்-
இச்சகோதரி-
பெயர்-
சர்மிளா......!!!

(தொடரும்.....)

(குறிப்பு- வரலாற்று ஆதாரங்களை-
தொடரின் கடைசியில் குறிப்பிடுகிறேன்)

Sunday 23 December 2012

முகலாயர்களே....(15)

பாரதத்தின்-
இதயம்!

டெல்லி-
மாநகரம்!

பார்த்து-
கொண்டிருக்கிறது-
இன்று -
வரைக்கும்!

வரலாறுகள்!

தகராறுகள்!

ரத்தங்கள்!

யுத்தங்கள்!

தியாகங்கள்!

சத்தியாகிரகங்கள்!

மண்ணுக்காக-
மடிந்தவர்கள்!

மடிந்தும்-
மறக்க-
முடியாதவர்கள்!

இன்னும்-
எத்தனையோ-
ரணங்கள்!

சுகங்கள்!

அவ்விதயத்தில்-
இருப்பவைகள்!

கலங்காதிரு-
ஓ!
இதயமே!

உன் ரணங்கள்-
ஒரு நாள்-
மாறுமே!

உலகின்-
நியதி-
அசத்தியம்-
அழிவதும்-
சத்தியம்-
ஜெயிப்பதுமே!

உன்னை போலவே-
எங்குது-
என்-
உள்ளமே!

சொல்வார்கள்-
மன்னன் எவ்வழியோ-
மக்கள் அவ்வழி!

மன்னன்-
பகதுர்ஷா -
நடந்தது-
நல்வழி!

அதனால்தான்-
தலைநகரத்தில்-
ஜொலித்தது-
அறிவின் ஒளி!

கார்னல்-
வில்லியம்ஸ் -எனும்
எழுத்தாளன்-
எழுதியுள்ளார்!

ஆக்ஸ்போர்ட் பல்கலை-
கழக மாணவர்!

ஏழுவருட-
படித்து -
ஆலிம்பட்ட்ம்-
பெற்றவர்!

இருவரும்-
ஒரே தகுதியுள்ளவர்!

இவ்வாறாக-
முகலாய-
பேரரசை -
பற்றி-
எழுதியுள்ளார்!

அன்று-
அறிவு ஒளியாக-
இருந்த -
மக்கள்!

இன்று-
சிறைவாசியான-
மக்கள்!

நம் நாட்டில்-
நிலவர செய்தி!

சிறைக்கம்பிக்கு-
பின்னால் --
அதிகரிக்கும்-
முஸ்லிம்கள்!-இது
இந்தியா டுடே-
அட்டைப்பட செய்தி!

இதெல்லாம்-
யாருடைய-
சதி....!!

(தொடரும்.....)







Saturday 22 December 2012

முகலாயர்களே....(14)

இளமை-
பருவமானது!

எண்ணங்களை-
விதைக்கும்-
பருவகாலமது!

விதைகள்-
மரமாகும்!

எண்ணங்களே-
நம் வாழ்வாகும்!

இன்றைய-
இளைஞர்கள்-
காலம் -
எப்படி-
கழிகிறது!?

பொருந்தும்-
அதை கொஞ்சம்-
எண்ணி-
பார்ப்பது!

ஒரு-
பள்ளி மாணவன்!

பாட்டில்-
குத்தி-
செத்தான்!

ஏன்-
பாட்டில்-
வயிற்றில்-
குத்தியது!

பாட்டிலை-
இடுப்பில்-
மறைத்து-
வைத்தது!

மறைக்கும்-
அளவிற்கு-
என்ன-
அது!?

அதுதான்-
மதுபான-
பாட்டில்-
அது!

ஒரு-
வளாகத்தில்-
ஒரு பெரியவர்-
மலந்து-
கிடந்தார்!

யார்-
இவர்!?-
பள்ளி -
தலைமை ஆசிரியர்!

கிடந்த-
இடம்-
பள்ளி கூடம்!

காரணம்-
மதுவின்-
போதையாகும்!

இவைகள்-
பழைய-
செய்தி!

நேற்றைய -
செய்தி!

புனிதா-
எனும்-
சகோதரி!

பதிமூன்று-
வயது-
இளம் சிறுமி!

படிக்க-
சென்றாள்!

மறுநாள்-
புதரில்-
செத்து கிடந்தாள்!

கைது-
செய்யபட்டான்-
சுப்பையா -எனும்
மிருகம்!

காரணம்-
சொன்னான்-
போதையால்-
ஏற்பட்ட -
காமம்!

"ஒத்துழைக்க-"
மறுத்ததால்-
அச்சிறுமியை-
ஆக்கி இருக்கிறான்-
சடலம்!

வெளியில்-
தன்னை -
சொல்லிடுவாள்-என்ற
பயம்!

வருமானத்தை-
சொல்லுபவர்களே!

அதனுடைய-
அவலங்களையும்-
சொல்லுங்களே!

மதுவும் தான்-
நம் -
இளைய சமூகம்-
கடக்க வேண்டிய-
சோதனை!

எத்தனையோ-
பலியாகிவிட்டார்கள்-என்பதுதான்-
வேதனை!

அரசு-
செய்யுமா-
பரிசீலனை!?

ஆனால்-
மன்னர்-
பகதூர்ஷா-
அவர்கள்!

வீர விளையாட்டிலும்-
வேட்டையாடுதலிலும்-
உடல் வலிமை-
சேர்த்தது-
இளமை காலங்கள்!

தன்-
அறை எங்கிலும்-
மூலிகை மருந்து-
சோதனை-
கூடங்கள்!

கொட்டி கிடந்த-
செல்வங்களை-
எட்ட நின்றே-
பார்த்தவர்!

தன்னை-
இவ்வுலகில்-
வழிபோக்கராகவே-
எண்ணியவர்!

(தொடரும்.....)

(குறிப்பு-புனிதா சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் தாதன்குளத்தில்-
நடந்தது)





Friday 21 December 2012

முகலயர்களே.....(13 ) (600வது கவிதை!)

கல்வியானது!

ஆணும்-
பெண்ணும்-
காலமெல்லாம்-
கற்க வேண்டியது!

கற்க-
கற்க-
கல்வி-
கரையாதது!

ஆனால்-
இன்று-
கல்வியோ-
ஏழைகளுக்கு-
எட்டா கனியானது!

எட்டாத-
தூரத்திற்கு-
யார்-
விற்பனை-
பொருளாக்கியது!?

வீதி தோறும்-
பாடசாலை-
அமையனும்-
நம் முன்னோர்கள்-
சொல்லாகும்!

தெருவெங்கும்-
கள்ளு கடை-(டாஸ்மாக்)
வைத்ததே-
அரசின்-
சாதனையாகும்!

தன் மானத்தோடு-
வாழ்ந்தால்தான்-
மனுசனடா!!

மானங்கெட்ட-
குடி-
கேவலம்டா!!

அன்றைய-
அரசர்கள்-
என்றால்!

நமது-
மன கண்களுக்கு-
வருவது-
முன்னால்!

அந்தப்புரங்கள்!
அந்தரங்கங்கள்!

அழிச்சாட்டியங்கள்!
அழித்து கொள்ளும்-
சண்டைகள்!

சர்வாதிகாரம்!
தலை கணம்!

உடனடி-
நினைவுக்கு-
வருவது-
இவைகள்!

இவைகளையெல்லாம்-
செய்பவன் யாராகிலும்-
அரசன் அல்ல-
அசிங்கங்கள்!

இது-
பொருந்தும்-
முக்காலங்கள்!

பகதூர் ஷா-
மன்னன்!

கல்விமான்!

பலமொழிகள்-
அறிந்தவ்ரும்கூட!

பல நூல்கள்-
எழுதியவரும் கூட!

கவிஞரும்-
கூட!

அன்றைய-
பிரபலமான-
கவிஞர்கள்-
காலிப்-
ஜாக்-
இவர்களும்-
இருந்தார்கள்-
மன்னர் கூட!

இன்னும்-
சொல்கிறேன்-
கொஞ்சம் பயணியுங்கள்-
என் கூட!

(தொடரும்.....)



Thursday 20 December 2012

முகலாயர்களே.....(12)

அஸ்தமனமே-
இல்லாத-
ஆட்சியென-
இருந்தவர்களை!

அகங்காரங்களை-
கிரீடமாக-
சுமந்தவர்களை!

ஆட்டங்கான-
செய்தவர்!

முதல் சுதந்திர-
போராட்ட நாயகர்!

அறிக்கை போர்-
நடந்தி கொண்டு-
"பீற்றி"கொள்ளும்-
இந்நாளில்!

அறுக்கவும்-
அறுபடவும்-
போர்க்களம்-
கண்டார்-
அந்நாளில்!

கொள்கை கொண்டவர்களை-
குலை நடுங்க -
செய்வது-
பாசம்!

அப்பாசத்தை-
மிஞ்சி இருந்தது-
அவரிடன்-
ரோசம்!

களம் காண-
துணிந்தவர்-
எண்பத்தி இரண்டு-
வயதில்!

போராட்ட தலைமை-
பதவி-
அமர்ந்தது-
அவரது-
தலையில்!

எத்தனை-
அரசர்கள்-
வெள்ளையனுக்கு-
கப்பங்கட்டி-
 வாழ்ந்தார்கள்-
வாயை மூடி!

கப்பமா!?-என
கர்ஜித்ததில்-
சிலும்பியது-
அந்த சிங்கத்தின்-
பிடரி முடி!

"மன்னிப்பு-
எனக்கு பிடிக்காத-
வார்த்தை "-என
வசனம் பேசியவர்-
எதிர்க்கட்சியாக-
 பதவி ஏற்பு!

"அவ்வார்த்தையை-"
உச்சரிக்காமல்-
உண்மையாக-
இருந்த நாயகன்-
பெயரோ-
இருட்டடிப்பு!

ஆம் -
அவர்தான்-
மாமன்னர்!

முகலாய வம்சத்தின்-
வழி வந்த-
பேரரசர் பகதூர் ஷா ஜாபர்!!

(தொடரும்......)





Wednesday 19 December 2012

முகலாயர்களே.....(11)

மனிதர்களின்-
வாழ்வானது!

பலதரப்பட்ட-
பழக்க வழக்கங்களை-
உள்ளடக்கியது!

பல தேச-
கலாச்சாரங்களை-
நாமே அறியாமல்-
பின்பற்றுவது!

பண்டைய தமிழனின்-
உழைப்பை -
உள்வாங்கி உள்ளதாம்-
பிரமிடுகள்!

அதற்காக-
பிரமிடுகளை-
நம் வீடென்றால் -
எத்தனை பேர்-
நகைப்பார்கள்!?

திருக்குறள்-
தனது -
வாழ்வின் வழிகாட்டி-என
சொன்னார்-
அயல் நாடு-
அறிஞர் ஒருவர்!

அவரை-
தமிழ் நாட்டுக்காரர்-
என்றால்-
எத்தனை பேர்-
ஒத்து கொள்வார்கள்!?

இன்றைக்கு-
பல மனைகளில்-
மேற்கத்திய கழிவறைகள்-(வெஸ்டர்ன் டாய்லட்)
வைக்கிறார்கள்!

அதற்காக-
சில வருடம்-
கழித்து-
அயல் நாட்டினர்-
தன் வீடென்றால்-
எத்தனை பேர்-
அமைதி கொள்வார்கள்!?

அவ்வாறே-
நமது -
பண்டைய கால-
கட்டிடங்களில்-
மிளிர்ந்தது-
திராவிட கட்டிட-
கலைகள்!

வழிபாட்டு-
தளங்கள்!

வீட்டு மனைகள்!

இன்னும்-
அரண்மனைகள்!

இன்னும்-
இருக்கிறது-
எண்ணிலடங்காதவைகள்!

இரு சமூகங்களின்-
வழிபாட்டுத்தலங்கள்-
ஒரே மாதிரி-
தூண் என்றால்!

அதன்-
அர்த்தம்-
உடைத்துதான்-
கட்டியது-
என்றால்!

இவைகள்-
எத்தனைதான்-
பொய்களை-
பரப்புமோ!?

இன்னும்-
எத்தனை-
உயிர்களை-
பறிக்குமோ!?


ஔரங்கசீப்-
பிறர் மத-
வழிபாட்டு தளங்களை-
உடைத்தவர்!

என்றெல்லாம்-
தன் மேல்-
பழியை-
சுமந்துள்ளவர்!

இன்றும்-
நாடெங்கும்-
பல தொண்மை-
தளங்கள்-
இருக்கின்றது!

அப்பொழுது-
"அவர்"-
கண்களில் இருந்து-
எப்படி தப்பித்தது!?

கஜோரா-
அஜந்தா -
சிற்பகலைகள்-
இன்றும்-
இருக்கிறதே!?

இவைகளெல்லாம்-
கலவரக்காரர்களின்-
கூற்றை பொய்யென-
உரைக்கின்றதே....!!

(தொடரும்....)





Tuesday 18 December 2012

முகலாயர்களே......(10)

வெள்ளையர்கள்-
வியாபார வழி-
வருமானம்!

அதை விட-
மிகுதியாக-
இருந்தது-
தன்மானம்!

வந்த-
வேலையை-
பார்த்தால்-
பொறுத்தார்!

பிழை ஒன்று-
செய்தால்-
வெறுத்தார்!

அன்றைய-
உலகில்-
முப்பது சதவிகித-
மக்களை-
ஆண்டார்!

ஆனாலும்-
ஆடம்பரம்-
தவிர்த்தார்!

நல்லவர்களுக்கு-
நாட்டில்-
இடம் தந்தார்!

அழிச்சாட்டியம்-என்றால்
"களம் "-
கண்டார்!

அன்றைக்கு-
எவரி -என்றவன்
கடற்கொள்ளையில்-
ஈடுபட்டார்!

கோபத்தில்-
ஔரங்கசீப்-
கொதித்தார்!

வெள்ளைய -
அதிகாரிகளை-
சிறையில்-
அடைத்தார்!

வெள்ளையர்கள்-
ஆறு லட்சம்-
பவுண்டுகள்-
அபராதம்-
கட்டினார்கள்!

மண்டியிட்டு-
மன்னிப்பு கேட்டு-
வயிறு பிழைத்தார்கள்!

ஔரங்கசீப்-
"இருந்தவரை"-
ஆங்கிலேயர்கள்-
அடங்கி-
ஒடுங்கி கிடந்தார்கள்!

அவ்வீர-
ஔரங்கசீபை-
வசை பாடுகிறார்கள்!

நன்றி கெட்ட-
கூட்டங்கள்!

இன்னைக்கு-
என்ன நிலமைங்க-
ஆகி போச்சி!!?

பணமெல்லாம்-
"கருப்பாக-"
சுவிஸ்ல-
பதுங்கிருச்சி!

"சில்லரையிலும்"-
மண்ணு -
விழுந்திருச்சி !

ராமேஸ்வர -
கடலின் நிறம்-
சிகப்பாகிருச்சி!!

போபல்-
நடந்து-
இருப்பத்தேழு-
வருசமாச்சி!

இழப்பீடு கூட-
கிடைக்காம-
அம்மக்கள்-
வாழ்வு-
கண்ணீரில்-
கரைந்து போச்சி!

இதுல-
கூடன்குள-
திறப்பு பற்றி-
பேச்சி!!?

தேவைதான்-
தேச வளர்ச்சி!

அதைவிட-
முக்கியம்-
மக்களின்-
உயிர் மூச்சி!

என்ன செய்ய-
நாம புலம்புவதே -
வேலையா -
போச்சி!!

ஆனாலும்-
நம்பிக்கை துளிர்கிறது-
நம் நாட்டில்-
மலரும் நல்லாட்சி!

(தொடரும்.....)






Monday 17 December 2012

முகலாயர்களே....(9)

சிங்கம்டா-என
போஸ்டர் ஓட்டுறான்-
சிங்கிள் டீக்கு-
"சிங்கி"-
 அடித்தவனெல்லாம்!

"அப்பாடாக்கர்-"என
அலப்பரை கூட்டுறான்-
"அல்லக்கைகள்"-
எல்லாம்!

கொலை வழக்குல-
தலையிடுதுக-
கிளை செயலாளர்-
"பொறுப்புகள்"-
எல்லாம்!

மாநில பிரமுகரை-
வரவேற்பதில்-
கொலை வரை-
செல்கிறது-
மாவட்ட பொறுப்புகள்-
எல்லாம்!

சின்ன சின்ன-
பதவிகூட-
"பவுசு"-
காட்டுது!

"எக்ஸ்"என்ற -
அடையாளம்கூட-
"படம்-"
காட்டுது!

இவைகளெல்லாம்-
விளக்க தேவையில்லை-
ஆதாரங்கள்!

நாட்டில்-
நடக்கும்-
சாதாரண-
நிகழ்வுகள்!

அன்றைக்கு-
ஔரங்கசீப்-
உலகின் ஐந்து-
பெரிய சாம்ராஜ்யங்களில்-
ஒரு-
சக்ரவர்த்தி!

சிறிதளவு-
நம்-
சிந்தனைக்கு-
அவர் வாழ்வு முறை-
பற்றி!

முகலாய -
மன்னர்களில்-
மிகபெரும்-
செல்வந்தரும்-
அவர்தான்!

எளிமையாக-
வாழ்ந்தவரும்-
அவர்தான்!

தொப்பி-
விற்றும்!

உடைகள்-
விற்றும்!

அவ்வுணவில்-
மகிழ்ச்சி கொண்டது-
அவர் வாழ்வும்!

தலையணை கீழ்-
வைத்திருந்த பணத்தை-
செலவழித்து-
கொண்டது-
அவரது-
மரணம்!

இம்மன்னர்களை-
புகழ-
 இக்கவிதைகள்-
இல்லை!

இம்மன்னர்களின்-
வாயிலாக-
மனிதர்கள்-
மத்தியில்-
பிணக்கங்கள்-
உருவாக்கபடாமலில்லை!

பிணக்கங்கள்-
தவிர்க்க-
இணக்கங்கள்-
உருவாக -
இக்கவிதைகள்-
ஒரு துளியானால்-
என் மன-
மகிழ்வுக்கு-
அளவே இல்லை!

(தொடரும்......)




        

Sunday 16 December 2012

முகலாயர்களே...(8)

செலுத்துகிறோம்-
நாம் ஈட்டிய-
வருமானத்தில்-
வருமான வரி!

வாங்க -
முடியாத-
விலைவாசியானாலும்-
பொருளில்-
சேர்ந்திருக்குது-
விற்பனை வரி!

பொறுத்து -
கொள்கிறோம்-
மின்சாரமே -
இல்லாமல்-
மின்சார கட்டண-
உயர்வு!

வாழ்வாதார-
பால்-
விலை உயர்வு!

உயிரை உறிஞ்சும்-
மது விற்பனை-
சாதனை -
அளவு!

இன்னும்-
என்னன்னா -
விற்கிறதோ-
அத்தனையிலும்-
இருக்கிறது-
வரி!

நாட்டுக்குத்தானே-
போகிறது-
வரி!

நினைத்து-
கொண்டால்-
அதுவும்-
சரி!

இதனை-
மனதில்-
நிறுத்துவோம்!

அடுத்து-
வரலாற்றுக்கு-
போவோம்!

என்ன-
இந்த -
ஜிஸ்யா வரி!?

இது-
முகலாயர்கள் மீது-
பெரிதுபடுத்தப்படும்-
ஒரு வகுப்புவாத-
வதந்தீ!

இவ்வரியாவது(ஜிஸ்யா வரி)-
முஸ்லிம்கள் அல்லாத-
மக்கள் மீது-
விதிக்கப்படும்-
பாதுகாப்பு -
வரி!

இப்பணம்-
மன்னரின் -
சமூகத்திற்கு-
செலவழிக்கபட்டதா-
சிந்திப்பதே-
சரி!?

இல்லை-
என்பதே-
சரி!

மன்னரின்-
சமூகத்திற்கும்-
இருந்தது-
வரி!

அதன்-
பெயர்-
ஏழை வரி!(ஜகாத்)

இருக்கும்-
வீட்டை -
தவிர்த்து!

கணிசமான-
அளவிற்கு மேல் -
அசையும் சொத்து-
அசையா சொத்து-
அத்தனைக்கும்-
வரி வாங்கப்பட்டது!

இத்தனையும்-
அரசு கஜானாவில்-
சேர்க்கபட்டது!

சொல்லுங்கள்-
சொந்தங்களே!

இதில்-
யாருக்கு-
அதிக வரி!

ஏன்-
ஒருதலைபட்சமாக-
பிரசாரத்தின் வழி-
விதைக்கபடுது-
கொலை வெறி!?

(தொடரும்.....)

(குறிப்பு-ஜகாத் பணம் யார் நிர்பந்தமும் இல்லாமல் இறைவனுக்காக கொடுப்பவர்களும்-
இருக்கிறார்கள்-கொடுக்காதவரை நிற்பதிந்து கொடுக்கவும் -வைக்கப்பட்டுள்ளார்கள்!
இது ஜகாத் இஸ்லாமியர்களின்-
நான்காவது கடைமையும் கூட)






Saturday 15 December 2012

முகலாயர்களே......(7)

முகலாய-
மன்னர்களில்-
அதிகம்-
விமர்சிக்கபடுபவர்!

மன்னர்-
ஔரங்கசீப்-
ஆவார்!

கொஞ்சம்-
பார்ப்போம்-
இவர்-
எப்படிபட்டவர் -
ஆவார்!!

தந்தை-
ஷாஜகானை-
கைது செய்தவர்-என
குற்றசாட்டு !

ஏன் செய்தார்-என
சிந்தித்தோமா-
நம் மனசாட்சியை-
தொட்டு!?

காரணம்-
தாஜ் மகாலை-
கட்டியதுதான்!

பைத்துல் மால்(பொதுநிதி)-
எடுத்து அதை -
கட்டியதுதான்!

ஒரே-
வித்தியாசம்!

தந்தைக்கும்-
மகனுக்கும்!

தந்தை-
கட்டிடத்தை-
ரசனையாக-
பார்த்தார்-
கட்டி முடித்தார்!

தனயன்-
நீதியை நேசித்தார்-
வீட்டில்-
சிறை வைத்தார்!

கன்றுக்காக-
தன் மகனையே-
கொன்றவரை-
மனு நீதி சோழன்-
என்கிறோம்!

பொதுநிதியை-
செலவழித்ததால்-
சிறை வைத்தவரை-
"வெறியன்"-
என்கிறோம்!

இன்றைக்கு-
அமர்ந்து விட்டால்-
ஆட்சியில்!

எல்லாம்-
அனுபவிக்கிறார்கள்-
ஓசியில்!

ஒருவர் கலந்து-
கொள்ளும்-
நிகழ்ச்சிக்கு!

இலவசமாகுது-
குடும்பத்துக்கு!

சொல்கிறார்கள்-
விமான சேவை-
நஷ்டம் என்று!

ஏன் சொல்ல-
மறந்தார்கள்-
ஒவ்வொருவரின்-
ஆட்சிகால செலவு-
இவ்வளவு-
என்று!?

"இப்படிப்பட்ட-"
ஆட்சியாளர்களை-
பார்த்தே பழகிவிட்ட-
நாம்!

"அப்படிப்பட்ட-"
ஆட்சியாளனை-
தூற்றுவோம்தாம்!!

(தொடரும்.........)





Friday 14 December 2012

முகலாயர்களே.....(6)

அச்செய்தி -
சொல்லியது!

அதன்-
சுருக்கம்-
இது!

"ஒரு இஸ்லாமிய-
அமைப்பு (பெயர் குறிப்பிட்டு இருந்தது)-
அதனை செய்ததாகவும்!

மீனாக்ஷி அம்மன் கோவில் -
உலக அதிசயமானால்-
தாஜ்மகால் மௌசு-
குறைந்திடும்-
என்பதாலும்!

என்றெல்லாம்-
எழுதி இருந்தது!

முஸ்லிம்கள் கூட-
கடிந்து -
கொண்டார்கள்-
அவ்வமைப்பினர்களை!

கொட்டி தீர்த்தார்கள்-
வார்த்தைகளை!

ஒரே சமூகத்தை-
சார்ந்தவர்களே-
இப்படி என்றால்!

எப்படி -
கொதித்து-
இருப்பார்கள்-
அக்கோவிலை-
புனிதமாக-
கருதும்-
சகோதரர்கள்!

சில-
நாட்கள்-
சென்றது!

உண்மை-
வெளிவந்தது!

அச்செயலை-
செய்தவர்கள்-
முஸ்லிம்கள் -
அல்லாதவர்கள்!

பூக்கடை-
ஏல விவாகாரத்தில்-
நடந்த-
பிரச்சனைகள்!

ஒருவர் மற்றவரை-
பழிவாங்கவே-
இக்குண்டு வைத்த-
சம்பவங்கள்!

ஒரு துளிகூட-
சம்பந்தமில்லை-
அவ்வமைப்பினர்கள்-
மீது!

எதற்க்காக-
இல்லாததை-
பொல்லாததை-
அப்பத்திரிக்கைகள்-
எழுதுகிறது!?

எழுதிட-
முடியும்!

பத்திரிகை-
பெயரையும்!

அவ்வமைப்பினர்-
பெயரையும்!

ஆனாலும்-
நாகரீகம்-
கருதி-
நான் -
தவிர்த்தது!

இன்னும்-
இது போன்ற-
செய்திகளை-
பரப்பவே-
செய்கிறார்கள்!

மக்களே!-
நீங்களே-
உண்மையா-என
சிந்தித்து பார்த்து-
கொள்ளுங்கள்!

பிணந்தின்னி-
கழுகள்-
பிணங்களைதான்-
தின்னும்!

இக்கழுகுகளோ-
மனிதர்களை-
சண்டையிட்டு-
சாகவே-
எழுத்தையும்-
பயன்படுத்தும்!

எத்தனையோ-
பத்திரிக்கைத்துறை-
நண்பர்கள்!

உண்மையை-
தேடி உயிரையும்-
பணயம் வைக்கிறார்கள்!

அப்பேர்பட்டவர்களில்-
இது போன்ற-
அசிங்கங்களும்-
இருக்கிறார்கள்!

கட்டபொம்மன்கள்-
மத்தியில்-
எட்டப்பன்களும்!

திப்பு சுல்தானை-
சுற்றி -
தப்பான-
வரலாற்று திரிபுகளும்!

நிறைந்தே-
காணபடுகிறது!

உண்மை எது-
பொய் எது-
சிந்திப்பதே-
சாலசிறந்தது!

(தொடரும்....)





Thursday 13 December 2012

முகலாயர்களே....(5)

பெரும்பாலான-
மக்கள்-
விரும்புவது!-
சமூக-
நல்லிணக்கத்தை!

சிலர்-
விஷத்தை-
விதைத்து-
அதில்-
நிரப்பி கொள்கிறார்கள்-
தன் வயிற்றை!

மதுரை-
என்றால்-
மல்லியும்!

மீனாக்ஷி அம்மன்-
கோவிலும்!

சுதந்திர போராட்ட-
தியாகி-
மருதநாயகம்-
"தலை " அடக்கம்-
செய்யப்பட்ட-
சம்மட்டிபுரமும்!

பல பசுமையான-
நினைவுகளை-
தரும்!

வாசத்திற்கும்-
பேர் இருக்கு!

பாசத்திற்கும்-
மனசிருக்கு!

கடல் இல்லாத-
ஊரு!

அரசியல் புயல்கள்-
மையம் கொள்ளும்-
ஊரு!

நான் -
சொல்ல போற-
செய்தி வேறு!

சில வருடங்களுக்கு-
முன்னால்!

மதுரைஎங்கும்-
ஒரு செய்தியை-
பரப்பியது-
விளம்பர-
 பலைகையினால்!

உலக அதிசயமவதற்க்கு-
மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு-
வாக்களிக்குமாறு!

வாகனங்கள்-
மதுரையில் -
காண முடிந்தது-
இப்பதகைகளை-
சுமந்தவாறு!

இவ்வேளையில்-
ஒரு வார இதழ்-
செய்தி வெளியிட்டது!

அது-
"கோவிலில் குண்டு-
கண்டுபிடிக்கப்பட்டது-"என
எழுதியது!

நல்லிணக்கம் -
விரும்பும்-
எல்லோரையும் -
நசுக்கியது!

அச்செய்தியானது.....!!!

(தொடரும்......)

(குறிப்பு;மருதநாயகம் சுதந்திரத்திற்கு போராடியதால் உடலை வெள்ளையர்கள் கண்ட துண்டமாக வெட்டி தலையை மட்டும் மதுரையில் புதைதுள்ளார்கள்-
மற்ற உறுப்புகளை வேறொரு ஊருகளில் புதைத்தார்கள்)


Wednesday 12 December 2012

முகலாயர்களே......(4)

நிலவை-
வார்த்தையில்-
வடிப்பவன்-
கவி-
பித்தன்!

காதலுக்காக-
காலத்தை-
இழப்பவன்-
காதல்-
பித்தன்!

மண்ணில்-
நிலவை-
சலவை செய்து-
"அதிசயம்"-
செய்தவன்-
கலை-
பித்தன்!

அப்பித்தன்தான்-
தாஜ்மகால்-
கட்டிய-
முகலாய மன்னன்-
ஷாஜகான்!

இந்தியா -
என்றால்-
தாஜ்மகாலும்!

தாஜ்மகால்-
என்றால்-
இந்தியாவும்!

ஒன்று சேர-
நினைவுகள்-
வந்து விடும்!

வெண்ணிலாவிடம்-
ஒளியை கடன்-
வாங்கி கட்டியதுபோல்-
அற்புதம்!

பார்க்க-
பார்க்க-
வியக்க வைக்கும்-
கலைகளின்-
களஞ்சியம்!

உலகின்-
அதிசயங்களில்-
முதலிடம்!

அக்கட்டிடத்தின்-
சொந்தம் கொண்டாட-
கூடிய மக்களோ-
நாட்டில்-
கடைசி இடம்!

ஓ!
ஷாஜகானே!
முகலாய மன்னனே!

இன்று-
உன் வாரிசுகளுக்கு-
வாடைகைக்கு -
வீடுகள் கூட-
மறுக்குதே!

நாட்டை ஆண்ட-
சமூகம் -
நடுத்தெருவில்-
நிக்குதே!

எத்தனை-
கமிசன்கள்-
வச்சாச்சி!

அத்தனையும்-
அவலத்தை-
சொல்லிருச்சி!

நடை முறைபடுத்தாமல்-
மனசு ஏனோ-
அரசுகளுக்கு-
மரத்து போச்சி!

ஏன்-
நியாயம் தேடும்-
கண்களில்-
மண்ணு விழுந்திடுச்சி!?

தாஜ்மகால்-
உலகபோரின்போது-
குண்டுகளில் இருந்து-
பாதுகாக்க-
மூங்கில்களால்-
கட்டப்பட்டது!-

புகைபடியாமல்-
இருக்க-
குறிப்பிட்ட தூரம்-
புகைவண்டிக்கு-
தடை விதிக்கப்பட்டுள்ளது!

கட்டிடத்தை-
பாதுகாக்கும்-
உங்களுக்கு!

மக்களின் நிலையை-
 கண்டும் காணாமல்-
இருப்பது-
எதற்கு!?


(தொடரும்.....)




Tuesday 11 December 2012

முகலாயர்களே...(3)

நிலவினை-
பாடாத-
கவிஞர்களா!?

நிலவு-
தராத-
கற்பனைகளா!?

வர்ணங்கள்-
ஜாலங்கள்-
புரிவதுண்டு!

ஒரே-
வர்ணம் கொண்ட-
நிலவே!-
நீ!
எத்தனை-
சலனங்கள்-
தருவதுண்டு!

கொள்ளைகொள்ளும்-
குழந்தை-
சிரிப்பாகவும்-
தெரிகிறாய்!

நேசமானவளின்-
முகத்தை-
நினைவூட்டுகிறாய்!

ஒதுக்கியவளின்-
நினைவை-
தூரத்தில்-
இருந்து  தந்து-
துன்புறுத்துகிறாய்!

பிறையாக-
தெரிந்து-
மௌனமாக-
சிரித்தவளின்-
சிணுங்களை-
நினைவூட்டுகிறாய்!

நட்சத்திரங்கள்-
புடை சூழ-
ராணி போல்-
வலம் வருகிறாய்!

வெறித்து பார்க்கும்-
என்னவள்-
பார்வையை -
போலும்!

திரும்பி-
நான் பார்த்தால்-
மறைந்து கொள்வது-
போலவும்!

நிலவே!
பௌர்ணமி-
நாளில்-
ஒளியை -
கொட்டுகிறாய்!

அண்ணாந்து-
பார்க்கையில்-
மேகத்துக்குள்-
மறைந்து-
கொள்கிறாய்!

எத்தனை-
ரசனை வருது-
உன்னை-
பார்த்து!

எழுத முடியாத-
என் நிலையை-
பார்த்து-
எழுத்துக்கள்-
சிரிக்கிறது-
என்னை-
பார்த்து!

படைப்பான-
உன்னையே-
முழுவதும்-
அறிய முடியவில்லை!

உன்னை-
படைத்தவனின்-
பெருமையை-
எப்படி-
வார்த்தைகளில்-
அடக்கி சொல்ல!

"முகலாயர்-"
தலைப்பை-
வைத்தேன்!

முழு நிலவை பற்றி-
எழுதி இருக்கிறேன்!

இரண்டின்-
தொடர்பை-
தொடருங்கள்-
சொல்கிறேன்!

(தொடரும்....)






Monday 10 December 2012

முகலாயர்களே......(2)

இல்லை-
இல்லை -
என்று-
கத்தினார்கள்-
கதறினார்கள்-
அம்மக்களும்-
ஆய்வுகளும்!

நம்ப மாட்டோம்-
இருக்குது-
"பேரழிவு ஆயுதம்"-
என்றார்கள்-
கொடுத்தவர்களும்!
எதிரியாக-
மாறியவர்களும்!

அதன்-
விளைவானது!

ஒரு நாடே-
சுடுகானாது!

இது-
ஒரு புறம்!

இனி-
மற்றொருபுறம்!

ரயிலில்-
ஒரு பகுதி-
எரிந்தது!

பிறகு-
பொய் பிரச்சாரம்-
பரவியது!

ஒரு-
மாநிலமே -
மனிதத்தை-
தொலைத்தது!

கலவரம்!
கலவரம்!

எங்கும்-
கொலைகளம்!

முன்பு-
உலகளவானது!

பின்பு-
நம் -
தேசமானது!

சில வருட-
ஆட்சியிலே!

இத்தனையும்-
செய்து முடிக்கையிலே!

உடனடியாக-
ஒளிபரப்பு-
செய்கிற
ஊடகங்கள்-
இருக்கையிலே!

முகலாயர்களே!
உங்கள்-
எண்ணூறு வருட-
ஆட்சியிலே!

தேசத்தையே-
புரட்டி இருக்கலாமே-
உங்கள்-
அதிகாரத்தினாலே!

நீங்கள்-
மதவெறியர்கள்-
என்றால்!

மதமாற்றம்-
செய்தவர்கள் -
என்றால்!

ஏன்-
இன்னும்-
உங்கள்-
சமூகம்-
சிறுபான்மை-
மக்கள்!?

இன்னும்-
அத்தனை-
சமூகமக்களும்-
வாழ்கிறதே!

இதுவே-
உங்கள் மீது-
சுமத்தப்படும்-
குற்றங்களை-
துடைக்கிறதே!

ஆனால்-
மனங்கள்-
புரிந்திட-
மறுக்கிறதே!!

(தொடரும்.......)



Saturday 8 December 2012

முகலாயர்களே....(1)

முகலாயர்களே!
ராஜபுத்திர-
அரசர்-
அழைத்ததால்-
பாரதம்-
வந்தீர்கள்!

வந்த-
நீங்கள்-
கொள்ளையா-
 அடித்தீர்கள்!?

உங்கள்-
தேசமான-
காபூலுக்கா-
கொண்டு சென்றீர்கள்!?

இல்லையே-
இங்குதானே-
இருந்தீர்கள்!

மண்ணோடும்-
மக்களோடும்-
மலர்களாக-
மணம் வீசினீர்கள்!

அரண்மனைகளையும்-
ஏன்!?-
இன்றைய தலைநகர்-
நிர்மானித்தவர்களும்-
நீங்கள்!

செங்கோட்டையில்-
கொடியேற்றுவார்கள்-
சுதந்திர-
தினத்தன்று!

அது-
நேதாஜி அவர்களின்-
ஆசை என்று!

செங்கோட்டையின்-
சொந்தங்களுக்கு-
இடஒதுக்கீடு கூட-
கிடைக்க மறுக்குதே-
இன்று!

வெள்ளையன்-
கொள்ளையிட-
வந்தான்-
நம் -
தேசத்தை!

அப்போது-
ஆண்ட நீங்கள்-(முகலாயர்கள்)
வளமிக்க நாடாக-
மாற்றி இருக்குறீர்கள்-
நம் தேசத்தை!

அப்படிஎன்றால்-
நால்லாட்சிதானே-
ஆண்டிருக்கும்-
நம்-
தேசத்தை!

அப்போது-
ஏன்-
நீங்கள்-
கொடுங்கோலர்கள்!

கொள்ளையிட்டு-
அடிமைபடுத்திய-
வெள்ளையர்கள்-
நாகரீக -
புருஷர்கள்!

கூப்பிட்டதால் வந்த-
நீங்கள்-
"படை எடுத்தவர்கள்"!

சுரண்ட வந்த-
வெள்ளையர்கள்-
"வருகை புரிந்தவர்கள்"!

இவ்விசத்தை-
சுமக்கிறது-
பாட புத்தகங்கள்!!

ஏன்-
இந்த-
விஷ வித்துகள்!

ஒரு-
சமூகத்திற்கு-
எதிரான-
வன்மங்கள்!

(தொடரும்...)





Friday 7 December 2012

வெளிச்சங்கள்"! (10)

"நடந்த காரியங்களுக்கு"  -
காரணத்தை-
கண்டறிந்தவன்-
நீ!

எல்லாம்-
"செய்து விட்டு"-
எதுவும் -
தெரியாததுபோல்-
திரிந்தவர்கள்-
தெருவுக்கு-
இழுத்தவன்-
நீ!

"காவலாளிகள்"-என்று
சொல்லி கொண்டிருந்தவர்களை-
காவாளிகள்-என
உலகிற்கு காட்டியவன்-
நீ!

எங்கிருந்து-
தொடங்குது-
ஏன் -
தொடர்கிறது-
என்பதற்கு எல்லாம்-
பதிலை-
படித்தவன் -
நீ!

தேசபக்தன் -என்று
"மெச்சி" கொண்டவர்களை-
நெஞ்சி சட்டையை-
பிடித்து இழுத்தவன்-
நீ!

அநியாங்கள்-
சுமத்தப்பட்ட-
சமூகத்தை -
சுத்தம்-
செய்தவன்-
நீ!

தப்பு செய்த-
உண்மை குற்றவாளிகளை-
தண்டிக்கணும்-என்ற
நெஞ்சழுத்தம்-
கொண்டவன்-
நீ!

மர்மங்களை-
மறைக்காமல்-
வெளியுலகிற்கு-
சொன்னவன்-
நீ!

ஏதோ-
ஒன்றை மறைக்க-
எங்கோ ஓன்று-
நடக்க-
சம்பந்தபடுத்தி-
பார்த்தவன்-
நீ!

உன் மரணத்திலும்-
மர்மங்களை-
மறைத்து கொண்டே-
மறைந்து-
விட்டாயே!
நீ!

நீ!
வீரன் அல்ல-
மாவீரன்-
ஹேமந்த் கர்கரே-
நீ!

உன்னை போன்ற -
ஒரு சில-
வீரர்களால்தான்-
நீதி-
இன்னும் -
சாகாமல்-
இருக்கு!

உன்னை போன்றவர்கள்-
"நடவடிக்கைகள்-"
பலரின் தூக்கத்தை-
"கெடுத்து இருக்கு"!

எங்கிருந்தோ-
வந்தவனுங்க-
"உண்ம்மையை" சொன்ன -
உன்னை கொன்றதுதான்-
மர்மமாகவும்-
சந்தேகங்களையும்-
புதைத்து-
இருக்கு....!!!!!

---------முற்றும்-----

Wednesday 5 December 2012

வெளிச்சங்கள்"! (9)

"இருந்ததை"-
இடித்தார்கள்!

"இல்லாததை-"
இருக்குது-
என்கிறார்கள்!

அரசே-
கமிசன்கள்-
அமைத்தார்கள்'

உலக சாதனைக்கு-
பதியலாம்-
அத்தனை-
தவணை -
நீட்டிப்புகள்!

அக்கமிசன்-
சொன்ன-
முக்கிய -
குற்றவாளிகள் மேல்-
பாய மறுக்குது-
வழக்குகள்!

அப்போ-
எதற்கு-
நடத்திட-
உத்தவு-
பிறப்பிக்கணும்-
கமிசன்கள்!

தெரியாமல்-
நடந்தால்-
விபத்தினால்-
மரணம்!

அனைவரும்-
பார்க்க-
நடந்ததுவோ-
அக்கிரம-
கொலைவெறியாகும்!

எல்லோரும்-
பார்க்க!

அரசுகளும்-
மௌனிக்க!

பாதுகாப்பு-
படைகளும்-
கண்ணை-
மூடி கொண்டிருக்க!

நடந்து-
முடிந்தது-
அச்சம்பவம்!

குத்தி-
கிழித்து-
தொங்கி கொண்டிருக்கிறது-
மதசார்பற்ற நாடு-என்ற
சொல்லாகும்!

உலகே-
தேசத்தை-
அகிம்சை-
பூமி-
என்றது!

இல்லை-
இனி-
அடாவடி பூமி-என
இச்செயல்-
சொல்லி சென்றது!

"மாட்டிறைச்சி -
சாப்பிடுவதை-
நிறுத்தி விடு-
இம்மக்கள் -
மாடுகளை-
புனிதமாக-
கருதுகிறார்கள்-என
தனயன்-
ஹுமாயுனுக்கு-
அறிவுறுத்திய-
பாபரே!

புனிதமாக-
மதிப்பதை கூட-
தவிர்க்க சொன்ன-
நீயா!!

அம்மக்கள்-
உயிராக
மதிக்க கூடிய-
வழிபாட்டு தளத்தை-
இடித்திருப்பாயா!?

அதில்-
வேறொரு -
வழிபாட்டு தளத்தை-
எழுப்பிருப்பாயா!!?

சந்தேகம்-
இல்லாமலில்லை!

உண்மை-
உறங்கியே-
கிடைப்பதில்லை!

விழுந்த-
கடப்பாரை-
இறை இல்லத்தில்-
மட்டும்-
இல்லை!

இறையாண்மையின்-
இதயத்திலும்-
விழுந்த இடி-என்பதை
மறுப்பதற்கில்லை!

(குமுறல்கள் தொடரும்....)



Tuesday 4 December 2012

"வெளிச்சங்கள்"! (8)

உறவென்று-
சொல்ல -
யாருமில்லை!

பெற்றவர்கள்-
தவறியதால்-
இந்த-
நிலை!

மாமன் என-
ஒருவரிடம்-
தஞ்சம்!

அவரிடமோ-
பாசத்துக்கு-
பஞ்சம்!

வேறு-
 வழியுமில்லை!

ஏச்சும் பேச்சும்-
அவரிடமிருந்து-
கொஞ்சமில்லை!

பிரிந்திடும்-
நேரம்-
வந்தது!

பசியால்-
பரிதவிக்கிற-
நிலை -
அவனுக்கு-
ஏற்பட்டது!

வாழ வழி-
தெரியவில்லை-
இவனுக்கு!

ஒரு-
கை நீண்டது-
இவனை-
தாங்குவதற்கு!

அன்று முதல் -
இவனை படிக்கவைக்க-
அந்த கைகள்-
சுமைகளை-
சுமந்தது!

இன்று-
அவனை-
பட்டதாரியாக்கியது!

படித்தவன்-
மேடையில்!

படிக்க வைத்தவன்-
வருகிறான்-
மேடை நோக்கிய-
பாதையில்!

கைதட்டலில்-
அதிர்ந்தது-
அரங்கமே!

ஒரு இஸ்லாமிய-
சகோதரனுக்கு-
உதவியது-
இந்து சகோதரனின்-
மனமே!

தன் கதையை-
மேடையில்-
சொன்னான்-
பட்டதாரி!

"அரங்கதிலுள்ளவர்கள் "-
கண்களிலோ-
கண்ணீர் துளி!

காணொளி கண்ட -
என் கண்களிலும்-
அதே துளி!

இரு சமூகங்களின் -
ஒற்றுமை-
சுதந்திர கனவை-
நனவாக்கியது!

"அடிமைபடுத்தியவன்-"
"அடித்துகொள்ளட்டும்"-என
வாரலாற்றை-
திரித்து-
எழுதியது!

வரலாற்று-
திரிபுகள்-
வெடிக்காத-
அணு குண்டுகள்-
ஹிட்லர் சொன்னது!

அத்திரிபுகள்-
இன்றும்-
திரியாக-
கலவரதீயை-
அணையாமல்-
வளர்த்து கொண்டிருக்கிறது!

உண்மையான-
வரலாறை-
நாம் என்றைக்கு-
விளங்குவது!?

நம் தேசம்-
திருந்துவது!?

(குமுறல்கள் தொடரும்....)





Monday 3 December 2012

வெளிச்சங்கள்"! (7)

காலங்காலமா-
தொடரும்-
கொடுமை!

நம் மண்ணை-
ரத்த சகதியாக்குது-
தீண்டாமை!

எத்தனையோ-
சட்டங்கள்-
போட்டாச்சி!

அதெல்லாம்-
கிணத்துல-
போட்ட -
கல்லாச்சி!

"ஒரு காதல்"-
சேர்ந்திருச்சி!

பல வீடுகள்-
எரிஞ்சிருச்சி!

அந்தோ-
பரிதாபம்-
மனிதர்களா-
கொல்லபட்டார்கள்!?

இல்லை-
மனிதங்களையல்லவா-
கொல்கிறார்கள்!?

பிரச்சனையில்லாத-
உலகில்லைதான்!

"பிறப்பை"-
வைத்து-
ஏன் இந்த-
கொடுமை நிலை!?

உணவுக்காக-
"பிராணிகளை"-
கொல்வதை-
எதிர்க்கிறாங்க!

உயிரோட மக்கள்-
எரியும்போது-
மௌனிக்கிறாங்க!

பெரும்பான்மை-
ஓட்டு வாங்கினால்தான்-
ஆட்சியை -
பிடிக்கலாம்ங்க!

பெரும்பான்மையான-
சமூகம்-
இங்கே-
தாழ்ந்தவனாங்க!?

நிறங்கள்-
உருவங்கள்-
மனிதர்கள்-
அடையாளம்-
கண்டுகொள்ளவே!

இதை வைத்து-
சில மிருகங்கள்-
கொல்லுதே!

ஏன் ஒரே-
சமூகமாக-
இறைவன் படைக்கவில்லை-
சிலரின்-
கூப்பாடு!

இங்குதான்-
பயன்படனும்-
நம் பகுத்தறிவின்-
செயல்பாடு!

தண்ணீரை-
வாயினுள்-
செலுத்தினாலும்!

மூக்கினுள்-
செலுத்தினாலும்!

சேரும் இடம்-
வயிறுதான்!

இதுபோலவே-
நல்லதையும்-
கெட்டதையும்-
படைத்துள்ளான்-
இறைவன்!

இதுல-
வியாக்கியானங்கள்-
கொண்டு அலைகிறான்-
மனிதன்!

தெளிந்தவன்-
அறிஞன்!

தெளிவில்லாதவன்-
மூடன்!

பிறப்பால்-
குலத்தால்-
யாரையும்-
உயர்ந்தவன் -என்று
சொல்லவில்லை-
படைத்தவனே!

நமக்கென்னடா!-
உரிமை இருக்கு-
"அற்ப துளியில்-"
பிறந்தவனே!

(குமுறல்கள் தொடரும்.....)

Sunday 2 December 2012

வெளிச்சங்கள்!" (6)

வள்ளுவரை-
"அய்யன்"-
என்கிறோம்!

காந்தியை-
தாத்தா-
என்கிறோம்!

நேருவை-
மாமா-
என்கிறோம்!

பெரியாரை-
தந்தை-
என்கிறோம்!

அண்ணாதுரையை-
"அண்ணா"-
என்கிறோம்!

இவர்கள்-
நமக்கென்ன-
உறவின் முறை!?

மனித குலத்திற்கு-
ஏதோ ஒரு வகையில்-
அறிவுரை தந்திருக்கிறது-
அவர்களின்-
வாழ்வின் முறை!

உறவை சொல்லி-
அழைப்பதில்-
பிழை இல்லை!

முத்துராமலிங்க தேவர்!

ஆமினா-எனும்
தாயிடம்-
பால் குடித்து-
வளர்த்தவர்!

தேவரிடம்-
"நீதான்யா-
அதிகமா -
பால் குடிச்சேன்னு-
கேலியாக பேசுவாராம்-
நாகூர் கனி-
அத்தாயின் மகனார்!

முன்பெல்லாம்-
மாமன் ,மச்சான்-என
அழைத்து கொள்ளும் முறை-
அனைத்து சமூக-
மக்களிடமும்-
இருந்தது!

இன்றோ-
அப்பாச-
 அழைப்புகள்-
அணைந்து-
 போனது!

இதற்கு-
யாரை-
காரணம்-
சொல்ல!?

சாதியை சொல்லியும்-
மதவெறியை ஊட்டியும்-
ஓட்டுக்கு அலையும்-
அரசியலையா!?

எத்தனை முறை-
பட்டாலும்-
திருந்த மறுக்கும்-
மக்களையா!?

    

Saturday 1 December 2012

வெளிச்சங்கள்"! (5)

"என் தேசம்-
பூங்காவை போன்றது-
பல வண்ண-
மலர்கள் இருப்பது போல்-
பல சாதி மதங்கள்-
கொண்டது-என
நேரு சொன்னார்கள்!

இன்றைய-
மக்களின் நிலையை-
காண்பாரேயானால்-
நொந்தே மடிந்திருப்பார்கள்!

பெரும்பகுதி-
மலர்கள்-
கருகி விட்டது!

ஒரு-
பகுதி வளர்ச்சி-
சாதனையாக-
காட்டபடுது!

சுதந்திரம்-
வாங்கி-
அறுபது ஆண்டுகளுக்கு-
மேலாகி விட்டது!

இன்னும்-
வறுமை -
மாறவில்லை!

பட்டினி-
சாவுகள் -
குறையவில்லை!

தமிழ் நாட்டில்-
மின்சாரமே-
 இல்லை!

இதுக்கா-
நம் சுதந்திர போராட்ட-
தியாகிகள்-
மடிந்தார்கள்!?

மண்ணில்-
புதைந்தார்கள்!!

சிலர்-
பணக்கார பட்டியலில்-
இடம் பிடித்து-
விட்டால்!

ஏழைகள்-
வயிறுகள்-
நிறைப்பிடுமா-
அச்சாதனை-
பட்டியல்!?

ஒவ்வொரு-
முறையும்-
வறுமையை-
ஒழிப்போம்!
ஊழலை-
ஒழிப்போம்-என
சொல்றாங்க!

கேட்டு கேட்டு-
நம் காதுகளே-
"புளிச்சி"-
போச்சிங்க!

எதிர் கட்சி-
போன முறை-
நாடாளு மன்றத்தை-
நடத்த விடவில்லை!
காரணம்-
ஊழல்னு-
சொன்னாங்க!

இவங்க-
சவ பெட்டியிலேயே-
"ஆட்டைய-"
போட்டவங்க!

இந்த முறையும்-
முடக்குவோம்னு-
சொல்றாங்க!
காரணம்-
சில்லறை வணிகத்தில்-
அந்நிய முதலீடுனு-
சொல்றாங்க!

இவங்கதான்-
போன முறை-
ஆளும்போது-
அடித்தளம்-
இட்டவங்க!

இது-
எப்படி -
இருக்குங்க!?

எது-
எப்படியோ-
மக்கள் வரிபணங்கள்-
"மண்ணா போச்சிங்க!"

மக்களோ-
நடுதெருவுல-
நிக்குறாங்க!!

(குமுறல்கள் தொடரும்....)




Friday 30 November 2012

வெளிச்சங்கள்"! (4)

சொல்வார்கள்-
யானை வரும்-
பின்னே!

மணி ஓசை வரும்-
முன்னே!

அதுபோலவே-
நாட்டின் விழா-
நாட்கள்-
வரும் பின்னே!

பரபரப்பு-
செய்திகள்-
வரும்-
முன்னே!

தியாகிகளை-
நினைக்க வேண்டிய-
நாட்கள் அது!

திகிலான -
நாளாக -
பார்க்கபடுகிறது!

செய்திகள்-
தீயாக-
பரவும்!

பிறகு-
சில பல-
பேர்களின்-
வாழ்வு-
கேள்வி குறிகளாகும்!

"ஊடுருவி-"
விட்டார்கள்!

இதோ-
வந்து விட்டார்கள்!

பக்கத்து-
தெருவை-
தாண்டி விட்டார்கள்!

என்பதாகவெல்லாம்-
"சப்பை"-
கட்டுவார்கள்!

"கொடூரமானவர்களை"-
கையும் களவுமாக-
பிடிக்கணும்!

தவறு உறுதி என்றால்-
தண்டித்தே ஆகணும்!

இதில்-
மாற்று கருத்தில்லை!

அச்செய்திகள்-
வெளியிடுவதால்-
தப்பு செய்ய முயல்பவர்கள்-
திட்டத்தை -
மாற்ற வாய்ப்பில்லை-என
சொல்வதற்கில்லை!

மற்ற சமூகத்தினர்கள்-
ஒரு சமூகத்தின்-
மேல்-
வெறுப்புகொள்ள-
வழி செய்யாது-என
சொல்வதற்கில்லை!

என்னென்னமோ-
பெயர்கள் கொண்ட-
அமைப்புகளாம்!

எங்கிருந்து-
"இவர்கள்"-
வருகிறார்களாம்! ?

அப்பாவிகளை-
கொல்ல எவன்-
அனுமதிதானாம்!?

பதவி பவுசு-
கொண்டவனாக-
இருந்தாலும்-
சரி!

பஞ்ச பரதேசியாக-
இருந்தாலும்-
சரி!

அப்பாவி மக்களை-
கொல்ல அனுமதிக்கவில்லை-
மார்க்கம்-என்பதே-
சரி!

பரபரப்பு-
செய்திகளில்-
உண்மை இருக்குமா!?-
கேள்வி குறி!

திருச்சியில்-
அமைச்சராக பொறுப்பேற்று-
சில தினங்களில்-
விபத்தில்-
மரணமடைந்தார்-
மரியம் பிச்சை-
அவர்கள்!

வாகன-
ஓட்டுனரை-
சில தினங்கள்-
"கழித்துதான்-"
காவல்துறை-
கைது செய்தார்கள்!

அப்படியெல்லாம்-
இருக்கும்பொழுது!

ஒரு -
அசம்பாவிதம்-
நடக்கும்போது!

உடனடியாக-
சில நபர்கள்-
படங்கள்-
அமைப்புகள்-
பெயர்கள்-
செய்திகளில்-
வெளியிடும்போது!

எப்படி-
சந்தேகம்-
இல்லாமல்-
இருப்பது!?

சொல்லபடுது!

மின்னஞ்சல்-
வந்தது!

குறுஞ்செய்தி-
வந்தது!

ஒரு சமூக தளத்தில்-
எண்பது மில்லியன்-
போலி கணக்காளர்கள்-
இருப்பதாக-
ஒரு ஆய்வு-
சொல்லுது!

இப்படியெல்லாம்-
வேடிக்கைகள்-
இருக்கும்போது!

மக்களும்-
யோசிக்காமல்-
எப்படி-
நம்புவது!?

அல்லது!

"இவர்களிடம்"-
சொல்லி விட்டு-
"அவர்கள்"-
வருகிறார்களா!?

"அவர்களே"-
"இவர்களை"-
அனுப்புகிறார்களா!?

நடுநிலையானவர்களே!?

சந்தேகம்-
வருதுங்களா!?

இல்லைங்களா!?

(குமுறல்கள் தொடரும்...)











Wednesday 28 November 2012

வெளிச்சங்கள்"! (3)

எத்தனை பேர்-
மடிந்தார்கள்-
சுதந்திர-
வேட்கையிலே!

இன்று-
சுதந்திரத்தை-
தேட வேண்டி -
உள்ளது-
தேசத்திலே!

காந்தியை-
நாம்-
அறிவோம்!

காந்தி-
சொன்ன-
"என் தோளில்-
இரு புலிகள்"-
அலி சகோதரர்கள்!-
என்றார்கள்!
அச்சகோதரர்களை-
எத்தனை பேர்-
நாம்-
அறிவோம்!?

போராட்டகளம்-
கண்டதால்-
சிறையில் -
அடைக்க பட்டார்கள்-
அச்சகோதரர்கள்!

வெளியில்-
வந்தவர்களுக்கு-
கொடுப்பட்டது-
பணமுடிப்புகள்!

அப்பணமுடிப்புகளை-
அப்படியே -
போராட்ட இயக்கத்திற்கு-
கொடுத்தார்கள்!

வெறும்-
கையுடன்-
வீடு திரும்பினார்கள்!

இன்று-
அத்தியாகிகளை-
எத்தனை பேர்-
அறிந்தவர்கள்!?

நேதாஜி-
நமக்கு-
தெரியும்!

அவருடன்-
கடைசி வரை-
பயணம் சென்ற-
கர்னல் ஹபிபுர் ரஹ்மானை-
நமக்கெல்லாம்-
தெரியும்!!?

கப்பலோட்டிய தமிழர்-
வ.உ .சி -
தெரியும்!

அக்கப்பல் வாங்க-
அன்றைய மதிப்பான-
இரண்டு லட்சம்-
கொடுத்த -
ஹாஜி பக்கீர் முஹம்மது-
எத்தனை பேர்களுக்கு-
தெரியும்!?

தூக்கு தண்டனை-
விதிக்க பட்டார்கள்-
பல போராட்ட-
தியாகிகள்!

அத்தியாகிகள்-
அழுது புரண்டு-
கேட்கவில்லை-
உயிர் பிச்சைகள்!!

சொன்னார்கள்-
தூக்கில் போடாதீர்கள்-
"கழுவ" மரத்தில்!

தூக்கில் போடுங்கள்-
தூக்கு மேடையில்!

எங்கள் உயிர்-
பிரிகையிலும்-
உடல் பட வேண்டும்-
எம்மண்ணில்!

மறுநாள்-
தொங்க -
வேண்டியவர்கள்!

மலர்ந்த-
முகம்-
கொண்டிருந்தார்கள்!

அத்தியாகிகள்-
வீர மரணம் -
அடைய போகிறார்கள்!

அதுதான்-
மகிழ்ச்சியில்-
இருக்கிறார்கள்-என்பதை
கேட்டறிந்த -
அதிகாரிகள்!

தண்டனைகள்-
மாற்றி-
கொடுத்தார்கள்-
ஆயுள் தண்டனைகள்!

சிறுபான்மை -
மக்களாக இருந்தாலும்-
பெரும்பான்மையாக-
நாட்டுக்காக -
உயிர் துறந்தார்கள்!

இவர்களையெல்லாம்-
ஏன் மறந்தார்கள்!?

அல்லது-

ஏன்-
மறைத்தார்கள்!

அத்தியாகிகளின்-
வாரிசுகளின்-
இன்றைய நிலைகள்...!?

(குமுறல்கள் தொடரும்)

Tuesday 27 November 2012

வெளிச்சங்கள்" (2)

"கச்சையை"-
கட்டி விட்டு-
கவர்ச்சி-
காட்டுபவர்கள்!

அதை வைத்து-
"கல்லா"-
கட்டியவர்கள்!

அவர்களின்-
பங்கிற்கு-
கட்டவிழ்த்து-
விடுவார்கள்!

தீவிரவாதி-என
புளுகு மூட்டைகள்!

சிலர்-
வாதிடுகிறார்கள்!

படத்தை-
பார்த்து-
யாராவது-
முடிவெடுப்பார்களா!?-
என்கிறார்கள்!

அவர்களிடம்-
சில-
கேள்விகள்!

சில குழந்தைகள்-
மாடியில் இருந்து -
விழவில்லையா!?

தன்னை-
"சக்திமான்"-
காப்பாற்றுவார்-என
நம்பவில்லையா!?

அது-
அத்தொடரின்-
விளைவில்லையா!?

"கள்ள தொடர்புகளுக்கு"-
"சீரியல்கள்"-
காரணமில்லையா!?

இதை-
மனோவியலாளர்கள் -
சொல்லவில்லையா!?

வளரும்போது-
குழந்தைகள்-
வன்முறையாளனாக-
மாறுவதற்கு!?

அவர்கள்-
காணும்-
வன்முறை காட்சிகளும்-
காரணம்-
அதற்க்கு!!

ஆனால்-
அச்சமூக-
மக்கள் மட்டுமா!?-
விதிவிலக்கு!?

பெண்களை-
கேவலபடுத்தியதாக-
பெண்கள் அமைப்புகள்-
போராடுவார்கள்!

அதை -
எல்லோரும்-
அவர்கள்-
உரிமை-
என்பார்கள்!

சமூகத்தை பற்றிய-
 தவறான காட்சிகளை-
நீக்க சொன்னால்-
கருத்து சுதந்திரத்துக்கு-
எதிரானவர்கள்-
என்கிறார்கள்!

உயிருக்கும்-
மேலாக நேசிக்கபடுபவரை-
அசிங்க படுத்திய-
திரை படத்திற்கு-
அறப்போராட்டம்-
நடத்தப்பட்டது!

போக்குவரத்துக்கு-
இடையூறு என-
தலையங்கங்கள்-
தீட்டப்பட்டது!

வருஷா வருஷம்-
குருபூஜைகளின்போது-
விழும்-
சாதிய கொலைகள்!

இவ்வருடம் மட்டும்-
நூற்றி ஒன்பது கொலைகள்-என
பத்திரிகை-
செய்திகள்!

ஏன்-
மறந்தது-
இதை பற்றிய -
எழுதிட-
பேனாக்கள்!

ஏன் இந்த-
இரட்டை வித-
பார்வைகள்..!!?

(குமுறல்கள் தொடரும்....)






Monday 26 November 2012

வெளிச்சங்கள்! (1)

நடக்கும்-
"வெடிப்பு "-
சம்பவங்கள்!

பரப்பப்படும்-
அவதூறுகள்!

நடைபெறும்-
கலவரங்கள்!

சாதாரண-
செய்திகளாகும்-
கொலைகள்!

நடக்கும்-
கூட்டு-
கற்பழிப்புகள்!

மாண்டுவிடும்-
மனித நேயங்கள்!

ஒரு பக்கம்-
உண்மையை மறைக்கும்-
ஊடகங்கள்!

மறுபக்கம்-
பொய்யை உண்மையாக-
எழுதிடும்-
விஷம பேனாக்கள்!

சிலர்-
கைது-
செய்யபடுவார்கள்!

சிலர்-
போலி தாக்குதலில்-
சாவார்கள்!

காரணம்-
சொல்வார்கள்-
"நடத்தியவர்கள்"-
அவர்கள்-
என்பார்கள்!

ஆனாலும்-
குறையவில்லை-
"அசம்பாவிதங்கள்"!

திருடியவன்-
செத்து விட்டால்!

குறையனுமல்லவா-
திருட்டுகள்!

குற்றவாளிகள்-என
என்கௌன்டரில் (தற்காப்பு தாக்குதல்!)-
இறந்தவர்கள்-
என்றால்!

எப்படி-
தொடர்ந்து-
கொண்டிருக்கிறது-
வெடிப்பு-
சம்பவங்கள்!?

ஒரு சமூகத்தில்-
தவறு செய்பவர்கள்-
இருக்கலாம்!?

அதற்காக-
ஒரு சமுதாயத்தையே-
குற்றவாளி கூண்டில்-
நிறுத்தலாம்!?

அப்படிஎன்றால்-
இனிவருபவர்கள்!?

"தீர்ப்பு-"
சொன்னதுக்கு-
கல்லூரி மாணவிகளை-
எரித்தவர்கள்!!

"கணிப்பு "-
சொன்னதுக்கு-
பத்திரிகை -
அலுவலகத்தில்-
சில உயிர்களை-
எரித்தவர்கள்!!

கேரளத்தில்-
தன் கட்சியினர்-
செய்த கொலைகளை-
பெருமையாக-
முழங்கியவர்கள்!!

இன்னும்-
எத்தனையோ-
நடத்தப்படும்-
அரசியல்-
கொலைகள்!

ஆனாலும்-
இவர்களுக்கு-
"உத்தம புருஷ"-
வேடங்கள்!

இது-
எந்த ஊரு-
நியாயம்யா!?

இது-
ஒரு-
 சாமானியனின்-
சங்கடங்களைய்யா!?

கொஞ்சம்-
சொல்லிட -
ஆசைகொள்கிறது-
என் -
கவிதைகளய்யா!!


(குமுறல்கள் தொடரும்....)





Sunday 25 November 2012

நினைவானவளே....

உன்-
நினைவானது!

மலைபாம்பு-
போன்றது!

மலைப்பாம்பு-
இரையை -
விழுங்கி-
உடலை-
முறுக்கி-
கொள்கிறது!

உன் நினைவோ-
என்னை-
விழுங்கி-
உருக்கி-
கொல்கிறது!


Saturday 24 November 2012

கேவலபட்டவன்...."

மடியிலும் -
மார்பிலும்-
சுமந்தவள்!

உச்சி முகர்ந்து-
முத்தமிட்டவள்!

காய்ச்சலில்-
காய்ந்தபோது-
நெஞ்சு குழி-
கனன்றவள்!

விடிய விடிய-
விழித்திருந்தவள்!

விழியாக-
பார்த்து-
இருந்தவள்!

ஒண்ட இடமில்லாத-
என்னை-
"ராசா"-என
அழைத்தவள்!

அக்கம் பக்கம்-
அடிக்க முனைகையில்-
அரவணைத்தவள்!

அறிவு கெட்ட-
என்னை-
"அறிவு அறிவு"-என
கொஞ்சியவள்!

படுக்க-
 பாயில்லாதபோது-
தாவணியை-
விரித்து தூங்க-
வைத்தவள்!

"இவனா"-என
ஏளனமாக -
பார்த்தவர்கள்-
மத்தியில்-
"எம் பேரன்-"என
உரக்க சொன்னவள்!

அலை பேசியில்-
உறவுகளிடம்-
பேசி கொண்டிருந்தபோது!

அறிந்தேன்-
அவள் அருகில்-
இருந்ததை-
சப்தம் கேட்டபோது!

யாரென்று-
கேட்டாள்!

"சப்தாமாக"-
சொன்னபிறகு-
வாங்கி -
பேசினாள்!

என்னடா-
நல்லா இருக்கியா!?

-------------

சாப்பிட்டியா!?

----------------

எங்கேயும்-
சுத்தாதே!

---------------

கவலை -
படாதே!

-------------

பேச மாட்டியாடா!-
"கேவலபட்டவனே!?-என்று
சொல்லிவிட்டு!

காதும்-
கேட்கமாட்டேங்குது-
அலுத்து கொண்டு!

சென்றாள்-
அலை பேசியை-
கொடுத்து விட்டு!

நான்-
பேசியது-
அவள் காதில்-
விழவில்லை!

அவள்-
சொன்ன-
"கேவலபட்டவன்"-
வார்த்தை-
இனிக்காமல்-
இருக்கவில்லை!

என்னை-
தாங்கிய-
ஆச்சா (பாட்டி)-
உனக்கு!

என்ன செய்தாலும்-
கைம்மாறு ஆகுமா!?-
உனக்கு!

அப்படி என்றால்-
கேட்காமலே-
உன்னை போன்ற-
உறவுகளை தந்த -
இறைவனுக்கு!?

ஆனாலும்-
முயல்கிறேன்-
நன்றி செலுத்தும்-
கூட்டத்தாரில்-
இணைவதற்கு!




Friday 23 November 2012

தேவை விளக்கம்...

எப்பொழுதும்-
ஏன்-
"வெளக்கமாருடன்"-
நிற்கிறாய்!

என்னை-
பார்த்ததும்-
எடுக்கிறாயா!?

இல்லை-
நீ-
அதை -
எடுக்கும்போது-
நான்-
பார்க்கிறேனா!?

வெளங்காதவளே!-
விளக்கம்தான்-
சொல்லேன்!

நீ-!
எடுப்பது-
குப்பைகளை-
கூட்டி பெருக்கவா!?

இல்லை-
என்னையவும்-
குப்பையாக-
ஒதுக்கவா....!!?


தானாக......

தானாக-
கிடைத்தால்-
அது-
மரியாதை!

நாமாக-
கேட்டு-
பெற்றால்-
அது-
பிச்சை!

Thursday 22 November 2012

செத்தான் சீக்காளி...

வஞ்சியே!
விஷம் தடவிய-
அம்பு குத்தியவனாவது-
உயிரோடு-
இருப்பான்!!

மை தடவிய-
உன் விழியால்-
தாக்குண்டவன்-
உயிர்-
வாழ்வான்....!?

கொலுசு ...

சாகசக்காரியே!
"சலக்கு சலக்கு"-என
நீ!-
விட்டு செல்லும்-
கொலுசு-
சப்தம்!

"சதக்கு சதக்கு"-என
என்னை -
ஏன் !?-
வெட்டுது-
நித்தம்!?

Wednesday 21 November 2012

மனசே மனசே...

சொன்னாலும்-
கேட்காது!

தடுத்தாலும்-
கேட்காது!

அடம்பிடித்தாலும்-
அடங்காது!

முந்தி-
செல்லும்!

சந்தி சிரிக்க-
திரும்பும்!

பாசம் வைக்கும்-
பின்-
பரிதவிக்கும்!

நேசம் கொள்ளும்-
பின்னால்-
"அதுவே-"
கொல்லும்!

எதிர்ப்பை-
சொல்லும்-
பிறகு-
எறியப்படும்!

சலிப்படைந்து-
கிடக்கும்!

"அடைந்தே-"
கிடைக்க-
மறுக்கும்!

அன்பை காட்டும்-
அடிபட்டு-
திரும்பும்!

ஆசைகொள்ளும்-
அசிங்கப்படும்!

எத்தனை முறை-
இப்படி -
நடந்தாலும்!

அது-
என்னிடமே-
திரும்பி வரும்!

அதுதான்-
என்-
மனசாகபட்டது!

சொல்லடிகளால்-
சல்லடையாக்கபட்டது!

அம்மனசை-
ஏற்று கொள்வதே-
என் வழக்கமாக-
போனது!

மனசே இல்லாமல்-
பச்சிளம் பிள்ளைகளை-
கொன்று விட்டு!

குருட்டு நியாயம்-
பேசிக்கொண்டு!

உலகில்-
தெரிகிறது-
மனித மிருகங்கள்-
வாழ்ந்து கொண்டு!

அதனால்தான்-
மனசே இல்லாமல்-
வாழ்வதை விட!

பிஞ்சுபோன-
மனசோட-
வாழ்வது-
நல்லது-
அதைவிட!

ஒன்றுதான்-
ரப்பர்-
மரமும்!
என்-
மனமும்!

தாங்கி உள்ளது-
அத்தனை-
தழும்புகளும்!

ரப்பர்-
மரத்தை-
வெட்டினால்-
பால்-
வரும்!

மனம்-
காயம்ப்படும்போதேல்லாம்-
எழுத-
வருது!





Tuesday 20 November 2012

வலை...

ஒரு ஆண்-
கட்டுக்கடங்கா-
ஜல்லி கட்டு-
காளை!

கட்டுண்டு -
கட்டுப்பட -
வைக்கிறது-
மகள்கள் எனும்-
பாச வலை!

Monday 19 November 2012

துப் துப் துப்.........!!!

துருபிடித்த-
மனம் கொண்டவர்களின்-
கைகளில் இருப்பதை-
எண்ணி!

"துப்" "துப்"-என
துப்பி கொண்டும்-
கதறி கொண்டும்-
துப்பாக்கிகளும்-
வடிக்கிறது-
கண்ணீர்!

Sunday 18 November 2012

உள்ளங்களை சீராக்குவாயாக....!!

வானம்-
தூணில்லாமல்-
நிற்பது!

இன்னும்-
பூமியில்-
விழாமல்-
இருப்பது!

நீராவிகள்-
மேகத்தில்-
சேர்வது!

ஒரு இடத்திற்கு-
மேகங்கள்-
செல்வது!

வெறும் வயிறுடன்-
செல்லும் -
பறவைகள்-
வயிறு நிரம்பி-
கூடு-
திரும்புவது!

எதுவுமே-
இருப்பு இல்லாமல்-
பிறக்கும்-
உயிர்களுக்கு-
அனைத்தும்-
உலகில்-
கிடைப்பது!

ஆரோக்கிய-
தேகங்களும்-
நாட்கள்-
செல்ல செல்ல-
வலிமை-
இழப்பது!

உயிருக்கு-
உயிரானவர்கள்-
சுற்றி நின்றாலும்-
உயிர் பிரிதலை-
தடுக்க -
முடியாதது!

போர் முனையில்-
உள்ளவர்கள்-
நீண்ட நாள்-
வாழ்வது!

வீட்டில்-
அடைபட்டு-
கிடப்பவர்கள்-
அற்ப ஆயுளில்-
போவது!

ஒரே தண்ணீர்-
பாய்ச்சினாலும்-
மரங்களிடையே-
பழங்களிடையே-
வித்தியாசம்-
இருப்பது!

அந்தஸ்தின்-
உச்சத்தில்-
இருப்பவர்கள்-
அசிங்கபடுவது!

வறுமையானவர்கள்-
வாழ்வாங்கு-
உயர்வது!

அடாவடிகளுக்கு-
ஆட்சிகள்-
அதிகாரங்கள்-
நிலைப்பது!

அடாவடிகளை-
சிறை பிடிக்க-
மறுமலர்ச்சி-
உருவாகுவது!

இப்படியாக-
கால சக்கரங்கள்-
சுழல்வது!

இவ்வாறாக-
எத்தனையோ-
எண்ணங்கள்-
என்னுள்-
உதிப்பது!

அனைத்தையும்-
எழுதிட-
இந்த-
"அற்பனால்"-
முடியாது!

"அறிவுடையவர்களுக்கு-
எத்தனையோ-
இறைவனின்-
அத்தாட்சிகள்-
உலகில்-
இருக்கு!-
இறை மறை-
வாக்கு!-
இருக்கு-
இப்படியாக!!

இறைவா!
அறிவுடைய-
மக்களாக-
எங்களது-
உள்ளங்களை-
சீராக்குவாயாக!!




Friday 16 November 2012

வானும்- நானும்!

கொட்டி கிடக்கும்-
நட்சத்திரங்கள்!

படைத்தவனின்-
சித்திரங்கள்!

வளரும்-
தேயும்!

மறையும்-
தெரியும்-
நிலவு!

இது போன்றே-
நியாங்களை-
காணுது-
உலகு!

நிரந்தரமில்லை-
சந்திர கிரகணம்!

தண்டனை-
பெறாமல்-
இருப்பதில்லை-
அநியாயகாரனின்-
தலை கணம்!

அத்தனையும்-
அண்ணாந்து-
பார்க்கும்-
வானை!

உயரத்தில்-
இருந்தாலும்-
பணிந்தே பார்க்குது-
பூமிதனை!

அது போலவே-
தகுதி உள்ளவனுக்கு-
பதவி -
கிடைத்தாலும்-
பணிந்து-
நடக்கிறான்!

தராதாரம்-
தெரியாதவனுக்கு-
அதிகாரம் -
கிடைத்தால்-
"ஆடி" தொலைகிறான்!

சூரியன்-
மெல்ல-
மெல்ல-
சூடேற்றுது!

யார் ஆண்டாலும்-
என் தேச-
மக்களின்-
வயிறோ -
பசியால்-
காயுது!

பெத்தபுள்ள-
"அள்ளி கொண்டு"-
வந்தாலும்-
"அல்லக்கையாக"-
வந்தாலும்-
மாறாது-
தாய் பாசம்!

வாழ்வாதாரம் தேடி-
"வாக்கப்பட்டு"-
தேசங்கள் -
கடந்து போனாலும்-
பிறந்த மண்ணை-
நினைவூட்டும்-
வானம்!

வானம்-
எத்தனையோ-
தத்துவங்கள்-
தந்து கொண்டிருக்கிறது!

நமது-(மனிதர்கள்)
வாழ்வோ-
பரபரப்பில் (பிசி)-
தொலைந்து-
கொண்டிருக்கிறது...!!





Thursday 15 November 2012

ஆசைகள்....

அடங்கிடாத-
ஆசைகள்!

"அடங்கும் வரை-"
விடாது -
ஆசைகள்!

Wednesday 14 November 2012

யாருக்கேனும்.....

விறகு ஆவதற்கு-
முன்-
நிழல் தருகிறது-
மரங்கள்!

காய்வதற்கு-
முன்-
மணம் வீசுகிறது-
மல்லிகைகள்!

சருகாவதற்க்கு-
முன்-
பசுமை தருகிறது-
இலைகள்!

புதைவதற்க்கு-
முன்-
பிற உயிர்களை-
வாழ வழி செய்கிறது-
மழை துளிகள்!

உப்பில் -
சேர்வதற்கு-
முன்-
நிலத்தை-
செழிக்க செய்கிறது-
நதிகள்!

கரை சேர்வதற்கு-
முன்பு வரை-
"சுமைகளை-"
சுமக்கிறது-
கட்டு மரங்கள்!

சாம்பலாவதற்க்கு-
முன்-
பழைய கஞ்சிக்கு-
ருசி தருகிறது-
வாளமீன் -
கருவாடுகள்!

"அத்தனையும்"-
அழிவதற்குள்-
தருகிறது-
பயன்பாடுகள்!

மானுடர்களே!
நாம் "மறைவதற்குள்"-
யாருக்கேனும்-
உண்டா!?-
பிரயோசனங்கள்!

இருந்தால்-
சிறப்பு!

இல்லைஎன்றால்-
உயிருடன்-
"மரிப்பு"!


Tuesday 13 November 2012

குளித்த குழந்தையும்- உதித்த எண்ணங்களும்!

பூக்கள்-
அழுவதில்லை-
மழையில்-
நனைவதற்கு!

மழலை-
நீ!-
ஏன்!?-
அழுகிறாய்-
குளிப்பதற்கு!?

கிணத்து-
தண்ணியும்-
கொஞ்சம்-
உப்பு குறைக்கும்!

கூடுதலாக-
தண்ணீரும்-
சுரக்கும்!

நீருக்குள்ளே-
கூடுதலாக-
ஈரம்-
சுரக்கும்!

ஒரு பக்கம்-
உன்னை-
பெத்தவ!

மறுபக்கம்-
உன்-
அப்பனை-
பெத்தவ!

தென்றலும்-
நின்று பார்க்குது-
உன் அழுகை-
சத்தம்-
கேட்கவே!

குடும்பமே-
போராடுது!

உன்-
அழுகையை-
நிறுத்த மன்றாடுது!

வாசனை பூச்சுகள்(பவுடர்)-
வாசம்-
பெறவில்லை!

ஒரு பாவம்-
அறியா-
குழந்தைகள் என்பதால்-
மணக்க-
மறுப்பதில்லை!

உன் -
மொக்கை வாய்-
சிரிப்புக்கு!

அத்தனை-
மலர்களும்-
தோற்கும்!

சிறியவர்கள் மேல்-
அன்பு காட்டாதவரும்-
பெரியவர்களிடம்-
மரியாதை-
காட்டதவரும்-
நம்மை சார்ந்தவர்-
அல்ல!-
நபி மொழி!

நம் பிள்ளைகளிடம்-
நாம் எப்படி நடக்கிறோம்-
சிந்தித்தால்-
அடையலாம்-
நல்வழி!



Monday 12 November 2012

"எப்படியடி".....!!?

கத்தியின்றி!
ரத்தமின்றி!
எத்தனை -
ரணங்கள்!

நீ!
பார்த்த-
தருணங்கள்!

எப்படியடி-
உன்னால்-
முடியுது-
இப்படி....!!?


Sunday 11 November 2012

நம்மை நாமே அறிவோமா....!!

அனுப்பினோம்-
விண்வெளிக்கு-
விண்கலம்!

அமைத்தோம்-
பூமிக்குள்-
சுரங்கம்!

அடக்கினோம்-
ஆயிரம் பேர்-
பலம் கொண்ட-
யானையை!

அடைத்தோம்-
வீரத்திற்கு-
பேர் போன-
புலியை!

எத்தனையோ-
சாகசங்கள்-
செய்துள்ளான்-
மனிதன்!

அத்தனையிலும்-
இன்னும்-
எத்தனையோ-
புதிர்களை-
வைத்துள்ளான்-
இறைவன்!

இறப்புக்கு பின்-
காரணம்-
சொல்கிறோம்!

இயற்க்கை -
சீற்றத்திற்கு பின்-
காரணம்-
தேடுகிறோம்!

எல்லாவற்றுக்கும்-
காரணம்-
நடந்த பிறகு-
தேடும்-
நாம்!

"நடத்துபவனை-"
பார்த்தால்தான்-
நம்புவேன்-
என்கிறோம்!

ஒரு துளி நீரை-
கடலின் நீர்-
எனலாம்!

முழு கடலும்-
இந்த ஒரு-
துளிதானும்-
சொல்லலாம்!!?

நேற்றைய-
கண்டுபிடிப்பை-
இன்றைய-
கண்டுபிடிப்பு-
மிஞ்சுகிறது!

இன்றையதை-
நாளையது-
மிஞ்ச முயல்கிறது!

அதே போல்தான்-
விஞ்ஞானம்!-
நேற்று உள்ளதை-
இன்றுள்ளது-
மறுக்கிறது!

அல்லது-
கூடுதலாக-
ஒன்றை-
சொல்கிறது!

வியப்பாக-
உள்ளது-
விஞ்ஞானிகள்-
சொல்வது!

"விஞ்ஞான முயற்சி-
முற்று பெறுவதில்லை-
இன்னொரு -
தொடக்கத்தை-
தாராமல்-
போவதில்லை-"
என்பது!

விஞ்ஞானம்-
வரவேற்க்கதக்கது!

விஞ்ஞானம்-
மட்டுமே-
முடிவும்-
ஆகாது!

"தன்னை-
அறிந்தவன்-
தன் -
இறைவனை -
அறிவான்!-"
நபிகள்-
பெருமானார்!

சொந்தங்களே!
நம்மை -
அறிந்தோமா!?-

இறைவனை-
அறிந்திடதான்-
சிந்திப்போமா!?




Saturday 10 November 2012

நம்புகிறேன்...!!

நான்-
நம்பவில்லை-
அப்பொழுது!

"தென்னை மரத்தில்-
தேள் கொட்டினால்-
பனை மரத்தில்-
"நெரி" கெட்டுமாம்"-என
சொல்லும்போது!

நம்பாமல்-
இருக்க முடியவில்லை-
நான்-
இப்பொழுது!

என்னவளே!
நீ!
பின்னிய சடையில்-
நான்-
பித்து பிடித்து-
அலைகிறேனே-
இப்பொழுது...!!

Friday 9 November 2012

எனக்கெல்லாம்.....!!

தப்பாக-
ஒன்னும்-
சொல்லவில்லை!

தவறாக-
நினைத்தாளோ-
தெரியவில்லை!

இதுவரைக்கும்-
தவிப்பதுதான்-
என்-
நிலை!

சொன்னது-
சுட்டிருக்குமோ!?

இல்லை-
முள்ளாக-
குத்தி இருக்குமோ!?

"அவுகளை-"
பார்க்கும்போதெல்லாம்-
அந்த-
எண்ணம் வரும்!

"அவுக"-
போன பிறகுதான்-
சொல்லலையே-
என-
நினைவு -
வரும்!

ஒரு-
நீண்ட-
இடைவெளி!

அவுகளை-
கண்டேன்-
தெருவழி!

குளிர்ந்து-
என் -
நெஞ்சு குழி!

என்னை-
பார்த்தாக!
சிரிச்சாக!

அருகே-
போனேன்!

"என் உம்மாவ-
மாதிரியே-
இருக்கீக!-என
சொன்னேன்!

என்ன-
நினைத்தாங்களோ-
தெரியல!

அக்கணம்-
கண்ணீர் மல்கியதை-
மறைக்க-
முடியல!

என்னை போல-
மகன் இல்லையேனு-
நினைத்தாங்களோ!?

இவனெல்லாம்-
இரக்கம் படும்-
அளவுக்கு-
என் நிலைமையா-என
நினைத்தாங்களோ!?

நல்லது தானடா!
நல்லது தானடா!-என்று
சொல்லி விட்டு-
சென்றார்கள்!

என் பதிலை-
எதிர்பாராமலே-
சென்று விட்டார்கள்!

ஒரு துளி-
கண்ணீருக்கே-
அர்த்தம் தெரியவில்லை-
எனக்கு!

அப்படிஎன்றால்-
எனக்கும்-
என்னை போன்றவர்களுக்கும்-
என்ன-
அறிவு-
இருக்கும்!?

உணர்வுகள்-
பல எண்ணங்களை-
பகிர்ந்து-
போகின்றது!

அதை-
எழுத்தில்-
வடித்திட-
முனைகளில்-
மொழிகளும்-
தோற்று-
விடுகின்றது!




Thursday 8 November 2012

"இருந்தால்" என்ன.....!!?

ஆசை -
காட்டி!

நல்லவன்-
வேஷம்-
கட்டி!

மோகத்தை-
ஊட்டி!

ஆடி இருக்கலாம்-
கட்டில்!

இணையத்தில்-
நட்பு-
பாராட்டி!

மடங்கும்வரை-
மின்னஞ்சலால்-
விரட்டி!

சீரழித்து இருக்கலாம்-
மிரட்டி!

விசாரணை-என
அழைத்து-
கொண்டு!

விலங்குகளால்-
கட்டி-
விட்டு!

விடுவித்து-
இருக்கலாம்-
"விவகாரம்"-
முடித்து விட்டு!

அப்பாவிகளை-
சுட்டு விட்டு!

தீவிரவாதி-என
பட்டம் சூட்டி-
விட்டு!

"இதை"-
அப்புறபடுத்தி-
இருக்கலாம்-
அவ்விடத்தை-
விட்டு!

வறுமைக்கு-
பயந்து-
கொண்டு!

போயிருக்கலாம்-
"இங்கே"-
போட்டு விட்டு!

மனம் -
ஒத்து -
"வாழ்ந்து"-
விட்டு!

சலிப்பு -
தட்டியதும்-
பிரிந்து-
விட்டு!

தடையாக-
நினைத்து-
போயிருக்கலாம்-
இங்கே-
வீசி  விட்டு!

இப்படியாக-
எத்தனையோ-
காரணங்கள்-
இருக்கு!

அதனால்தானோ-
குழந்தைகளும்-
குப்பை தொட்டிகளிலும்-
காண கிடக்குது!?

ஒரே-
வித்தியாசம்!

மனிதனுக்கும்-
மிருகத்திற்கும்!

அது தான்-
இரக்கம்!

இரக்கம்-
இல்லாதவர்கள்!
"இருந்தால்"-
என்ன!?

இறந்தால்-
என்ன!?

அதற்காகத்தான்-
இயற்கை சீற்றங்களா-
என்ன!?

"தானே"-
தானா-
வரலாம்!

"நீலம்"-
நீளமா-
வரலாம்!

"சாண்டி"-
தாக்கிடலாம்!

"போண்டி"-
ஆக்கிடலாம்!

எதுவும்-
நிரந்தரம்-
இல்லை-
இவ்வுலகில்!

இரக்கம்-
இருக்கவேணாமா!?-
நம்-
மனதில்!!



Wednesday 7 November 2012

யார் வகுத்தது....!!?

யார்-
உசத்தி!

இதனால்தான்-
கலவர தீ!

குரு பூஜைகள்!

சாமானியனுக்கும்-
விழும்-
பூசைகள்!

கொண்டாடபடுது-
ஜெயந்தியாய்!

எரிகிறது-
ஏழைகள்-
வயிறெல்லாம்-
ஜெகஜோதியாய்!

சிறுபான்மை!
பெரும்பான்மை!

ஏன் இந்த-
மனப்பான்மை!

உயர்ந்தவன்!
தாழ்ந்தவன்!

இதை-
எவன்-
வகுத்தவன்!

ஒவ்வொன்றும்-
மனித-
உயிர்!

ஓட ஓட-
வெட்டுவது-
எதற்கு-
இந்த-
துயர்!?

இனம்-
மதம்-
மொழி!

அது-
அவரவர்களின்-
வழி!

கருத்துகளை-
சொல்வதில்-
தவறில்லை!

கழுத்தறுத்து-
கொல்வதில்-
நியாயமில்லை!

ஒவ்வொருவரின்-
பிறப்பும்-
ஒரே-
மாதிரி!

அவர்கள்-
நடத்தையால்-
ஆகிறார்கள்-
முன் மாதிரி!

தலைவர்கள்-
பிறந்தநாள்-
கொண்டாடுவதில்-
அவரவர்-
இஷ்டம்!

கொடுக்கனுமா-
மற்றவர்களுக்கும்-
கஷ்டம்!?

தலைர்கள்-
தேசத்துக்காக-
உழைத்தவர்கள்!

மனமாச்சரியங்களை-
மறந்தார்கள்!

ரத்தபந்தங்களை-
கூட-
துறந்தவர்கள்!

இன்றைய-
தலைமுறைகளால்-
சாதி-
மதம் -என்ற -
வட்டத்திற்குள்-
சிக்கி கொண்டவர்கள்!

உன்னால்-
என்னால்-
முடிந்தால்-
ஒரு உயிர்-
வாழவாவது-
உதவுவோம்!

முடியாதென்றால்-
தொந்தரவு-
செய்யாமலாவது-
ஒதுங்குவோம்!

"ஒரு ஆத்மாவை-
வாழ செய்பவன்-
உலகில் உள்ள-
அத்தனை பேர்களையும்-
வாழ வைத்தவனாவான்..."-
இது இறைவாக்கு!

மனதை -
தொட்டு கொள்வோம்-
எப்படி உள்ளது-
நம் போக்கு..!!





Tuesday 6 November 2012

என்னை விடு....

தாங்கி விடு-
இல்லை-
தாக்கி விடு!

சொல்லி விடு-
இல்லை-
கொள்ளி இடு!

அள்ளி கொடு-
இல்லை-
அள்ள விடு!

மேய விடு!
இல்லை-
விரட்டி விடு!

அண்ட விடு!
இல்லை-
சண்டை இடு!

படித்து விடு-
இல்லை-
திருப்பி கொடுத்து-
விடு!

எரிந்து விடு!
இல்லை-
எரிய விடு!

சென்று விடு!
இல்லை-
வழி விடு!

என்னவளே!
நீதானே!
பார்வையால்-
கொளுத்தி-
போட்டாய்!

ஏன்?-
பதில் தராமல்-
கொளுத்தியதை-
அணைக்க -
மறுக்கிறாய்!

நீ தானே!-
புன்னகையை-
பொசுக்கென-
சிந்தி சென்றாய்!

என்னை-
பூவில் திரவம்-
ஊற்றியது போல்-
பொசுங்கிட-
செய்தாய்!

உன்-
மௌனம்-
இருக்கிறது-
கிணற்றில்-
விழுந்த-
கல்லாட்டமாய்!

என் -
முயற்சி-
தொடர்கிறது-
கூடன்குள-
மக்களின்-
போராட்டமாய்!

ஒன்று-
வாழ -
பதில்-
சொல்லு!

இல்லை-
மறக்க-
வழி-
சொல்லு!



Monday 5 November 2012

தெரியாது.....

இரை-
கிட்டயா!?-
எட்டயா!?-
தெரியாது!

உணவு -
கிடைக்கும்வரை-
பறவைகள்-
சிறகை-
மடக்காது!

விழும் இடம்-
நதியா!?-
கடலா!?-
தெரியாது!

பெய்யும்-
மழை-
கொட்டுவதை-
நிறுத்தாது!

அடுத்து-
பள்ளமா!?-
மேடா!?-
தெரியாது!

ஓடும்-
நதி-
பயணத்தை-
நிறுத்தாது!

நீர்-
தருமா!?-
நிறுத்துமா!?-
ஊற்று கண்-
தெரியாது!

தண்ணீர்-
அள்ளுவதை-
கிணறுகள்-
தடுக்காது!

அண்ணாந்து-
பார்த்ததா!?-
இல்லையா!?-
எலி-
தெரியாது!

தனக்கான-
"வலைக்கு"-
மலையை -
குடையவும்-
மலைக்காது!

தாங்குமா!?-
தொங்குமா!?-
புயல் காற்றுக்கு-
தெரியாது!

தூக்கணாங்குருவி-
கூடு கட்டுவதை-
நிறுத்தாது!

மற்றவைகள் -
எல்லாம்-
தன் கடமை-
செய்ய தவறியதா!?-
தெரியாது!

அப்படி-
நடந்திருந்தால்-
இரவும்-
பகலும்-
வராது!

படைப்புகளிலெல்லாம்-
சிறந்த படைப்பான-
மனிதா!?
நம் திறமை-
பற்றி சிந்தித்தோமா!?-
என்றால்-
தெரியாது!

சிந்தித்தவர்கள்தான்-
இன்றைய-
வரலாறு!

நாம்-
நம் படைப்பின்-
நோக்கம்-
அறிந்தோமா-
என்றால்-
தெரியாது!

"ஒவ்வொருவரும்-
சுரங்கத்தை -
போன்றவர்கள்-என
தன்னம்பிக்கையூட்டுது-
நபி மொழியானது!


Sunday 4 November 2012

சிறப்பு நிகழ்சிகள்!

கடைசி வரை-
கலை சேவை-
செய்வேன்!-என
பேட்டிகள்!

பின் திரையில்-
"அவர்"-
ஒவ்வொரு உடையாக-
காற்றில் விடும்-
காட்சிகள்!

இப்படிதான்-
தொலைகாட்சியில்-
சுதந்திர தின-
சிறப்பு காட்சிகள்!

நாட்டில்-
உணவுக்குதான்-
பஞ்சம்!

பண வரவால்-
"இவர்களுக்கு"-
ஆடையில்-
பஞ்சம்!

தியாகத்தை-
பேசுபவர்களுக்குமா!?-
நாட்டில்-
பஞ்சம்..!?


Saturday 3 November 2012

"சுற்றிய ....."

வேலிகள்-
"சுற்றிய-"
பூந்தோட்டம்-
கண்டதுண்டு!

ஆடை-
"சுற்றிய-"
பூந்தோட்டம்-
கண்டேன்-
இன்று!

மகிழ்ந்து-
கொண்டது-
என் கண்கள்-
இரண்டு!

"பூவழகி"-
உன்னை -
கண்ட பின்பு!

Friday 2 November 2012

சிக்கிய....

வேண்டாம்-
வேண்டாம்-
என்றது!

நான்-
போகும்போது!

போடா-
போ-என
அலுத்து கொண்டது!

நான்-
திரும்ப திரும்ப-
போகும்போது!

வேணும்டா-
உனக்கு-
என்றது!

நான்-
வாடிய-
முகத்துடன்-
வந்தபோது!

தலை வாரும்போது-
"சிக்கியதால்"-
தெருவில்-
எறிந்தால்!

அந்த அழகில்-
"சிக்கிய "உன்னை-
எப்படி -
ஏற்றுகொள்வாள்!?

என்றெல்லாம்-
என்னிடம்-
குழம்பியது!

சீப்பில்-
சிக்கி -
தெருவில்-
கிடக்கும்-
அவளது-
கேசமானது!
(தலை முடி)

Thursday 1 November 2012

என்னை கேட்டால்...

அங்கங்களை-
மறைக்கத்தானே-
ஆடை!

"அங்கங்கே"-
தெரிகிறதே-
அவலட்சணமாக-
உள்ளாடை!

ஒழுங்கா-
உடை அணிந்தால்-
பழமை-
என்கிறார்கள்!

ஒழுக்கம் கெட்டு-
உடை அணிந்தால்-
புதுமை-
என்கிறார்கள்!

என்னை  கேட்டால்-
கொடுமை-
என்பேன்!

கவிதையா தெரியுமா...!?

திக்கி-
திணறி-
முக்கி-
முணங்கி-
எழுதினாலும்-
எனக்கே-
தெரியவில்லை-
கவிதையாக!

கனியே-
முக்கனியே!

நீ!
பிச்சி-
கசக்கி-
வீசும்-
காகித துண்டுகளும்-
தெரிகிறதே-
ஹைக்கூ-
கவிதைகளாக!

Wednesday 31 October 2012

நூலும்-நானும்!


நூற்கள்-
கடல்கள்-
குட்டி குட்டி-
தீவுகள்!

தேடி தேடி-
படித்ததுண்டு!

புத்தகத்திலேயே-
தொலைந்ததுண்டு!

புத்தகமே-
உனக்கும்-
எனக்கும்-
என்ன -
உறவிருக்கு!?

ஆமாம்ல-
ஒரே -
"எண்ண"-
உறவிருக்கு!

புத்தகங்களும்-
பிடித்தவங்களும்-
வடிவம் -
வேறு!

செயல்-
வடிவம்-
ஒன்று!

பிடித்தமானவர்கள்-
அருகே இருந்தால்-
சண்டை பிடிப்பார்கள்!

விலகி கொண்டால்-
வருந்துவார்கள்!

புத்தகம்-
படிக்கும்போது-
தூக்கம்-
வருது!

தூங்க சென்றால்-
படிக்க சொல்லி-
தூண்டுகிறது!

கலவரத்தில்-
கிழிக்கப்படும்-
மனிதர்கள்!

படிக்கும் போது-
உணரபடுது-
கிழிப்பது-
மனித மிருகங்கள்!

வாசிப்பது-
நேசிப்பது-
தேவைபடுது!

வாழும் காலம்-
முழுவதும்!





Tuesday 30 October 2012

மறைக்க தெரியல...

விரும்புகிறேன்-
கவலையின் போது-
மழையில்-
நனைந்து விட!

வழி தெரியவில்லை-
என் கண்ணீரை-
மறைக்க-
அதை விட!

Monday 29 October 2012

வீட்டு பூங்கா....

கணக்கில்-
எத்தனையோ-
பூங்காக்கள்-
உலகெங்கிலும்!

மொத்த-
பூங்காக்களையும்-
ஒத்த உருவமாக-
பெண் குழந்தைகளை-
இறைவன் -
அமைக்கிறான்-
ஒவ்வொரு-
வீட்டிலும்!

Sunday 28 October 2012

சிணுங்கி.....

 ஏதாவது -
பட்டால்தான்-
சுருங்கிடும்-
"தொட்டால் சிணுங்கி!"

என்னை-
வதைக்கிறாயடி-
நீ!
சிணுங்கி!

Friday 26 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (12)

"கயல் விழி!

இது-
இனியவனின்-
மொழி!

அன்புள்ள!
பாசமுள்ள!-என
ஆரம்பிக்கவில்ல!

காரணம்-
ஒரு வார்த்தையில்-
உன்னை அடக்கிட-
எனக்கு-
விருப்பமில்ல!

எனக்கு-
தெரிந்து-
என்னை நேசித்த-
ஒரு உயிர்-
என் தாய்!

எனக்கு-
தெரியாமல்-
நேசித்தவள்-
நீயாகத்தான்-
இருந்தாய்!

என் தாய்-
கண்ணீருக்கு-
சொந்தகாரி!

நீயோ-
சிரித்த-
முகத்துக்காரி!

"குடியால்-"
கெட்டது-
எத்தனையோ-
குடும்பங்கள்!

அதில்-
என்னைப்போல்-
எத்தனையோ-
இளைஞர்களின் -
எதிர்காலங்கள்!

"இருக்கிறவன்"-
குடித்தால்-
"அலுப்பு"-
என்கிறான்!

"இல்லாதவன்-"
குடித்தால்-
"கொழுப்பு"-
என்கிறான்!

எவன்-
"குடித்தாலும்-
அது-
மலம்தான்!

இதை-
ஏன்-
மறந்தான்!

"நான் என்ன-
செய்வேன்..!!?"

ஏன்-
கேவல சொற்களுக்கு-
நான்-
உள்ளானேன்!

என்னை-
பார்த்து-
திரும்பியவர்கள்!

ஒரு நாள்-
என்னை-
"அண்ணாந்து"-
பார்ப்பார்கள்!

சார்லி சாப்ளின்-
உலகையே-
சிரிக்கவைக்கவில்லையா!?

"என்னை -
அழவைத்த-
உலகை -
சிரிக்கவைக்காமல்-
விடமாட்டேன்-என
அவர் -
சொன்னவரில்லையா!?

இன்றைய -
தலைமுறைக்கு-
இலவச கல்வி-
கொடுத்தவர்-
காமராசர்-
இல்லையா!?

அவர்-
"படிக்காத-"
மேதையில்லையா!?

நம் தேசத்திற்கு-
உமருடைய ஆட்சி-
வேண்டும்-என்று
காந்தி -
சொன்னாரில்லையா!?

அந்த-
உமர்(ரலி..)அவர்கள்-
தந்தையால்-
"ஆடு மேய்க்க கூட-
லாயக்கில்லாதவன்-"என
திட்டுவாங்கியவரில்லையா!?

வையகம்-
சாக்கடைகளையும்-
கண்டதுண்டு!

சாதித்தவர்களையும்-
சுமந்ததுண்டு!

ஒரு-
நாள் நானும்-
வாழ்ந்து காட்டுவேன்-என
நம்பிக்கை -
எனக்குண்டு!

வரும் காலம்-
எந்தாய்-
கண்ணீர் துடைப்பேன்!

முடியுமான -
அளவு-
மற்றவர்களின்-
துயர் துடைப்பேன்!

காலம்-
கனிந்தால்-
உன் கரம்-
பிடிப்பேன்!

காலமெல்லாம்-
காத்திரு -என்று
சொல்லமாட்டேன்!

வேறொருவருடன்-
மணவாழ்க்கை-என்றாலும்
மனமார-
வாழ்த்துவேன்!

எனது -
பயணம்-
வெகு தூரம்!

எனக்காக-
நீ!
"வாடினால்"-
அது-
பெரும்பாவம்..!!

இவண்-
இனியவன்!

ஏனோ-
அவளை பற்றிய-
எழுத்தில்-
ஈரம்!

இவளது-
கண்ணீரால்-
மேலும்-
ஈரமானது-
கடிதம்!

-----முற்றும்---------------

(குறிப்பு-இக்கவிதை தொடர் பன்னிரெண்டும்-
மதுவின் தீமைகளை சொல்லும்-
மனித உரிமை ஆர்வலர்களுக்கு-
அர்ப்பணம்/
உங்களுக்கு பிடித்து இருந்தால்-
சமூக தளங்களில் இணைத்து கொள்ளுங்கள்)




Thursday 25 October 2012

நான் என்ன செய்வேன்...!!? (11)

 சல சலத்து-
செல்லும்-
கண்மாய் -
தண்ணி!

"சிலு சிலுத்து"-
செல்கிறது-
பூவையர்கள்-
குளிப்பதை-
எண்ணி!

பெண்ணானவள்-
பனி கட்டி-
போன்றவள்!

உண்மை-
பாசமென்றால்-
உள்ளங்கையிலும்-
உருகிடுவாள்!

பாசம் -
வேஷம் என்றால்-
உயிரையும்-
உறைய-
 செய்திடுவாள்!

"தம் " பிடித்து-
முக்குளிக்க-
துணிவு உள்ளவர்கள்-
முத்தை -
அடைகிறான்!

புல்லின் நுனி-
பனியிலும்-
பிடித்தமானவளின்-
ஈர முடியில்-
வடியும்-
துளி நீரும்-
காதல் பித்து-
பிடித்தவன்-
முத்தை-
காண்கிறான்!

"பொழுது அடைஞ்சா"-
கோழிகள்-
வீடு திரும்புது!

குளிச்சி விட்ட-
பைங்கிளிகள்-
"கூடு" திரும்புது!

ஒரு கிளி மட்டும்-
சந்து வழி-
வந்தது!

அக்கிளி-
நம்-
கயல் விழி!

குளித்து-
விட்டு-
பனியில்-
நனைந்து கொண்டு-
வருது-
ரோசா!

வருவதை-
எதிர்பார்த்து-
காத்து கொண்டுஇருக்கிறான்-
நம்ம-
ராசா!

எதிர்-
எதிர்-
வருகை!

தூரம்-
அடைந்தது-
குறைவை!

சிரித்து-
கொண்டு-
அவன்-
வந்தான்!

பயந்து-
கொண்டு-
அவள்-
வந்தாள்!

நெருங்கி-
விட்டார்கள்!

வெட்கத்தில்-
"கனன்று-"
விட்டார்கள்!

அவன்-
கையில்-
கொண்டுவந்த-
கடிதத்தை!

யாரும்-
பார்க்கவில்லை-
அவள் கையில்-
திணித்ததை!

பட படத்து-
போனாள்-
அவள்!

சர சர-என
போனான்-
அவன்!

அவளை-
சுற்றி-
குடும்பத்தார்-
படித்திட-
முடியவில்லை-
அக்கடிதத்தை!

அவன்-
வீட்டில்-
பெத்தவளின்-
கண்களில்-
கண்டான்-
கண்ணீரை!

தத்தளித்து-
கொண்டிருந்தாள்-
"அதை"-
பிரித்து-
படித்து விட!

அவன்-
வீட்டை விட்டு-
வெளியேறினான்-
தாய் கண்ணீரால்-
விடை-
பெற்றிட!

அவளுக்கு-
சமயம் கிடைத்து-
பிரித்தாள்-
கடிதத்தை!

அவன்-
அவசரமாக-
அடைந்தான்-
வாகனத்தை!

ஆயிரம் கிளைகள்-
இருந்தாலும்-
தாங்கும்-
ஆணி வேர்-
போல!

ஆயிரம்-
வேலைகள் -
உடல் செய்தாலும்-
உயிர் -
ஒன்று போல!

அண்ட சராசரங்களை-
அடக்கி ஆளும்-
ஒருவனை-
போல!

அத்தனைக்கும்-
விடை இருக்குது-
அக்கடிதத்தின்-
உள்ளே!

(தொடரும்...)


Tuesday 23 October 2012

நான் என்ன செய்வேன்....!!? (10)

"பட்டை"-
சரக்குக்கு-
தடை -
இங்கே!

"பாட்டில்"-
சரக்குக்கு-
தாராளம்-
இங்கே!

"பட்டை-"
உடலுக்கு-
நோயை -
தரும்!

"பாட்டில்"-
என்ன -
வலிமையா-
தரும்!!?


பாலும்-
பழமும்-
சாப்பிடுபவனுக்கே -
பல நோய்-
வருதுங்க...!!

பாழ போன-
"நாத்தத்தை-
குடிச்சா !?--
உடலுக்கு-
உறுதியாங்க..!!??

 மது தீமைகளின்-
தாய்-
நபி மொழி!

குடிச்சே -
தனக்கு தானே-
தோண்டி கொள்கிறார்கள்-
மரண குழி!

படுத்த படுக்கை-
ஆனான்!
பாவி-
மகன்!

அவன்தாங்க-
இனியவன்!
அப்பன்!

"நடமாட்டம்"-
இருந்தாலே-
இவன் குடும்பத்தை-
நாய் கூட-
நாடாது!

இனி-
எறும்பு கூட-
எட்டி பார்க்காது!

முதலிலாவது-
பழைய சோறு-
கிடைத்தது!

இப்போ-
அதுலயும்-
மண்ணு -
விழுந்து-
விட்டது!

யார் கூப்பிட்டது-
"குடிக்க "-என
சொல்லலாம்-
விற்பவர்கள்!

இவர்கள்-
பசியில் இருப்பவன் -
முன்-
ஊறுகாய் திறந்து காட்டி-
எச்சில் ஊற கூடாதுன்னு-
சொல்கிறவர்கள்!

ஒவ்வொருவருக்குள்ளும்-
இச்சைகள் எனும்-
மிருகம் -
இருக்கும்!

அது ஒவ்வொரு-
வினாடியும்-
"ருசி "பார்க்க-
காத்து கொண்டிருக்கும்!

"எல்லா பூனையும்-
சைவ பூனைதான்-
அதற்க்கு-
எலி கிடைக்கும் வரை!"-
இது-
நான் படித்ததில்
பிடித்த ஒன்று!

அதை பகிர்ந்துள்ளேன்-
இவ்வாததிற்கு-
பொருந்தும் என்று!

இனியவனுக்கு-
விழுந்த-
முதல் அடி!

படிப்பில்-
விழுந்தது-
இடி!

வாயிற்றுபாட்டுக்கே-
வழி இல்ல!

இளமை காலம்-
வந்ததோ-
இவனை-
இம்சித்து கொல்ல!

எதை-
தொட!

எதை-
விட!

வாழ்கை-
தாரமா!?

வாழ்வாதாரமா!?

(தொடரும்....)