Wednesday 14 December 2011

பார்வை!

பூக்களுக்குள்-
ஆயுதமா!?
ஆயுதம் போல்-
தெரியும் பூவா?

புரியாத-
இலக்கணமா!?-
புரியும் -
கவிதையா!?

சஞ்சல படுத்தும்-
சல்லாபமா!?-
சாந்தம் தரும் -
சந்தனமா!?

பனி காலத்தில் -
நெருப்பா!?-நெருப்பாக
கொட்டும் ஆலங்கட்டியா!?

காலையில் வாசம் -
வீசும் ''தாளிப்பா?-
தாளிப்பால் கூடும்-
பசியா!?

குளிர்விக்கும் -
குற்றாலமா!?-
குற்றாலத்தையே-
காய வைக்கும் -
கோடையா!?

பறவை -தேடும்
உணவா!?-
பறவைக்காக-காத்திருக்கும்
உணவா!?

நீர் தேடும்-
ஆணி வேறா!?-என் வாழ்வின்
தேடல் தான்-உன் பார்வையா!?

பதில் தேடுகிறேன் -உன்
ஒத்த பார்வைக்காக!

இத்தனை வார்த்தை -
வந்து விட்டது -
வரிவரியாக!

தமிழுக்கு-
பஞ்சமில்லை தான்!

எனக்கு தான்-
அறிவு கொஞ்சம் ''கூட ''-
இல்லை!

No comments:

Post a Comment