Friday 2 December 2011

பெண் மனசு!


இனிமையானவனே!
என் இளமைக்கு-
இனிதானவனே!

எவ்வளவு காலத்துக்குத்தான் -
என்னை பார்த்து கொண்டே-
இருப்பாய்!

உன் நேசத்தை -
எப்போது-
எனக்கு -
தெரிவிப்பாய்!

புரிந்து கொள்ள -
மாட்டாயா!? -
என்-
ஜன்னலோர -
சாடையை!

உன்னை-
 பார்க்க தானே-
இன்னும்-
 ''சீவி'' முடியாமல்-
இருக்கிறேன்-
 சடையை!

ஆண்களோட காதல் -
கோலத்தை போல!

காத்துக்கோ-
மழைக்கோ -
தாங்குறது -
இல்ல!

பெண்களோட காதல்-
கல்லுல எழுதுன -
எழுத்தை போல!

கல்லே உடைந்தாலும்-
எழுத்து அழியிறது -
இல்ல!

மழையை எதிர்பார்க்கும்-
பாலை வனம் -
அங்கே!

மனதில் உள்ளதை-
சொல்ல மாட்டாயா!?-
என ஏங்கும்-
''பாவை மனம்''-
இங்கே!

ஒன்னுக்கு மேல -
காதலிச்சா-
ஆண்கள் -
மன்மத குஞ்சு!

ஏறடுத்து பார்த்தாலே-
எங்களுக்கு-
கேவலமான -பேச்சு!

சொல்லிவிட வேண்டுமா!?-
காதலை -
நானாக!

பூக்கள் பூக்கிறதை-
புரிந்து கொள்கிறதே-
வண்டுகள் -
தானாக!

உன் நேசத்தை -
சொல்ல -
துணிவில்லாதவனே!

என் அப்பனின் -
''விருமாண்டி''மீசைக்கு-
நீ !
என்ன -
பயபடாதவனா!?

நீயோ!
காப்பாத்த-
நினைக்கிறே-
உன் தாயோட-
''வாக்கை''!

எனது மௌனமோ -
என் குடும்ப மானத்தை -
காக்க!

சரிபடாது -
இந்த காதல்-
எனக்கு!

உன் நிலைமையும் -
புரிந்து விட்டது -
எனக்கு!

மழை தயாள-
மனம் கொண்டது!

அதனால்தான் -
கடலிலும் -
கொஞ்சம்-
கொட்டுது!

காதலும் -
அப்படித்தானோ!

இணைந்திட-
முடியாதவர்களுக்கும் -
கொஞ்சம் -
வருதோ!?

1 comment: