Thursday 15 December 2011

லட்சிய வாதியே!

லட்சியம் -
கொண்டவனே!
அலட்சியம் -
கொள்ளாதவனே!

நீ-
இல்லை-
ஊதினால் -
அணையும் -
மெழுகு வர்த்தி!

காட்டையே ஒரு -
கை பார்க்கும் -
காட்டு தீ!

குமுறி கொண்டிருக்கும் -
எரிமலைக்கு-
முன்னால்-
குறை சொல்பவர்கள் -
எத்தனை நாளைக்கு!?

பாய்ந்து செல்லும்-
நதிக்கு !-
தடை ஏற்படுத்த-
தைரியம் இருக்குமா!?-
பாறைக்கு!?

நீயும்-
அப்படி தானே!

இகழ்பவர்கள் -
முன்னால்-
வாய் இளிசிட மாட்டாய்!

புகழ்பவர்கள்-
சொல்லில்-
புதைந்திட மாட்டாய்!

நீதிக்காக -
முடிந்ததையும் -
செய்வாய்!

முடியாததையும் -
செய்ய-
முயற்சிப்பாய்!

லட்சியம் -
ஜெயிக்க-
''மட்டும்''-
விரும்ப மாட்டாய்!

லட்சியம் ஜெயிக்கும் -
வரை விடமாட்டாய்!

மண்ணை விட்டு -
பிரிந்து இருக்கலாம்-
லட்சிய வாதிகள்!

உலகை விட்டு-
போனதில்லை -
இலட்சியங்கள்!

இன்றைய நிகழ்வு-
நாளைய வரலாறு!

இன்றைய லட்சியவாதிகள்-
நாளைய சரித்திரங்கள்!

இதெல்லாம் முடியுமா!?-என
சிலர் பேசலாம்-
எகத்தாளமாக!

நியாயம் வெல்லும் வரை-
தொடரும் -
இவர்களின்-
போராட்ட களம்!

அவதூறுகளை -
வீசலாம்-
குப்பைகளாக!

லட்சியவாதிகள்-
நெருப்பை போல!

நெருப்பை -
குப்பை '-
மூடிக்கொள்வதாக-
தெரியும்!

குப்பைகளை -
எரித்து விட்டு -
நெருப்பு-
வெளியே வந்தே தீரும்!

'மத வெறியன்''-
என்றார்கள் -
வீரன் திப்புவை!

உண்மை உலகிற்கு -
தெரிய வந்தது-
அவர் மேல்-
அது இட்டு கட்டு-
என்று!

நம் முன்னோர்கள்-
வாழவில்லை-
செம்மண் சகதியாக!

வாழ்ந்தார்கள்-
செங்கோட்டையில் -
சிங்கங்களாக!

நாம பொறந்த -
மண்!

நாம ஆண்ட-
மண்!

தலை நகரம் -
டெல்லி!

கொஞ்சம் -
கொஞ்சமாக-
அரிக்குது-ஊழல்
எலி!

ஆட்சியை நமதாக்குவோம்!
நாட்டை பொதுவாக்குவோம்!

எஸ்.டி.பி.ஐ. இல் இணைவோம்!இதனை
ஒரே குரலில் முழங்குவோம்!

No comments:

Post a Comment