Thursday 13 October 2011

நீ தயாரா?



ஆவியாக துணிகிறது -
தண்ணீர்!-
மேகத்தை-
சென்று அடைகிறது!

தீக்குளிக்க-
 தயாராகிறது-
அப்புறம் தான் -
தங்கம் ஆகிறது!

மூழ்கு வதில்-
 மகிழ்கிறான்-
அவனுக்கே முத்து -
கிடைக்கிறது!

தள்ளி விட-
 துணிகிறது-
தாய் பறவை !
விழும்போது -
சிறகை விரித்து -
பறக்க -
கற்று கொள்கிறது !
குஞ்சு பறவை!

வளைவுகள் இல்லாத -
சாலையா!?

வலிகள் இல்லாத-
வாழ்க்கையா?

பூக்கள் இல்லாத -
பூஞ்சோலையா?
முடிந்தால் கிடைக்காத -வெற்றியா!

மாறிட நினைப்பவனுக்கே,
மாறிட துணை புரிவான் -
ஒருவன்!

அவனே!
வணக்கத்துக்கு உரிய இறைவன்!



No comments:

Post a Comment