Sunday 16 October 2011

பெண்கள் தான்!


ஈ!எறும்பு கடிக்கும் -
வலியை கூட தெரியாமல் -
வளர்த்தவளும் -
ஒரு பெண்தான்!

மொத்த வலியையும்-
சொத்தாக -
எனக்கு தந்தவளும் -
ஒரு பெண்தான்!

முதலாமவள்!
இருந்தாள் -நாம்
உலகிற்கு வர -
ஆதி மூலமாக !

இரண்டாமவளோ!
எப்போதும் வேதனையே -
தந்தாள்-
நேசம் எனும்-
விஷத்தின் மூலமாக!

No comments:

Post a Comment