Tuesday 11 October 2011

இறைவன் ...!



சுவாசிக்கிறான்-
காற்றை-
கண்டதில்லை!

உணர்கிறான் -
வலியை-
அதை காண-
 முடிவதில்லை!

தாய் சொல்கிறாள்-
தகப்பன்-
இவனென-
 நம்புகிறான்!

உயிர் தன்னுள் இருந்தும்-
பார்க்க முடியாது-
உயிர் இருப்பதை-
உணர்கிறான்!

வியந்து இருக்கிறேன் -
ஒரு
இயக்குனரின் -
கலை படைப்பை -
பார்த்து!

பத்திரிக்கையாளர் -
கேட்டார்-
கேள்வி-
இயக்குனரை பார்த்து!

கடவுளுக்கு-
 நன்றி சொல்வீர்களா-!?
விருது பெற்றதுக்கு -
என்று!

என் உழைப்புக்கு -
கிடைத்ததுக்கு
நான் ஏன் -
கடவுளுக்கு நன்றி -
சொல்ல வேண்டும்-
என்று!?

அதிர்ந்தேன் -
பதில் இவ்வாறு -
இருக்கிறதே-
என்று !

அண்மையில்-
 அவரின் படம் -
ஊத்தி கொண்டது-
அப்போது என்ன-
இவர் உழைக்க வில்லையா?

படம் சிறப்பா வர -
ஒரு இயக்குனர் தேவை !

ஒரு குடும்பத்துக்கு -
ஒரு
தலைவன் தேவை!

இவ்வளவு -
பெரிய உலகம் -
இயங்குதா!-
தானாக!?

இவர்களின் -
அதி மேதாவி தனம் -
தெரிகிறது மடமையாக!!

No comments:

Post a Comment