Sunday 2 October 2011

மனுசனே.....!'



'போரடிக்க'-
 வாழ்வதா?-
வாழ்கை!

போராட்ட -
களம் தானே-
வாழ்கை!

நீ!
சருகாக மிதி பட -
போகிறாயா!?

சிகரமாக உயர -
போகிறாயா!?

அலட்சியமாக -
கழிவதா-
வாழ்கை!

லட்சியம்-
 நிறைந்தால் தானே-
அதன் பேர் வாழ்கை!

நேரமே போகவில்லை-
என்றால்-
வாழ்வே பிழை!

நேரமே போதவில்லை -என்று-
லட்சியத்திற்கு உழை!

இளைப்பாற-
 நிழல் தருது -
மரங்கள் கூட!

பசியாற ஒரு வாய் கொடுத்தோமா!-
மனுஷ மக்களுக்கு கூட!

பொட்டியில்-
 கட்டி வைக்காவா?-
பணம்!

கட்டி கொண்டு போகுமா!?-
பிணம்!?

மிதிச்சா நெழிஞ்சி-
எதிர்ப்பை காட்டு தே-
மண் புழுவடா!

முடங்கி தான் கிடந்தால்-
நாம என்ன மானுடமா!

பிறந்த பயனை -
அடைகிறதே-
மரமாகும் விதை !

விரயாமாதான் வாழ்வேன் என்றால்-
நாம மனுசனு சொன்னா-
என்ன முறை!??

No comments:

Post a Comment