Monday 19 September 2011

நிழலாடும் நினைவுகள்!

தனியாக-
 பேசிக்கொண்டோம் !
தன்னந்தனியாக -
பேசி கொண்டு -
அலைகிறேன் !
நான்!

உன் கூந்தலில் -
இடமிருந்தது -
செடியை பிரிந்த -
பூக்களுக்கு!

உன்னில் தான்-
 இடமில்லாமல் -
போனதே-
உறவு களை-
பிரிந்த எனக்கு!

மனதால்
இருவரும் -
விரும்பி -
கொண்டோம்!

பெத்தவங்களுக்காக -
வெவ்வேறு பாதையில் -
திரும்பி சென்றோம்!

இடைவெளி -
கூடி இருக்கலாம்-
இரு வரும் -
இணைந்து இருந்தால்!

பிரியம் குறையாமல் -
இருக்கிறதே-
பிரிந்ததினால் தானோ!?

காத்தடிச்சா -
மாறிடலாம் -
மணலின் -
தடங்கள்!

எத வச்சா -
ஆறிடும் -
காதலின் -
காயங்கள்!

சாலை விபத்து -
மோதி கொள்ளும்-
 வாகனங்களால் !

உள்ளதிற்க்கே-
 ஆபத்தானது -
மோதி கொண்ட -
நமது பார்வைகளால்!

காயத்தின் வழியே-
குருதி வரும்!

காதல் காயத்தின் -
வலியால்-
கவிதை வருது!

No comments:

Post a Comment