Wednesday 28 September 2011

பட்டால் தான்..!



ஆசிரியர்-
 அருமை-
தெரிந்தது-
அந்நிய மொழி-
பேச -
தெரியாத போது!

தண்ணீரின்-
 தரம் -
தெரிந்தது-
தாகத்தில் -
அலைந்த போது!

பிரிவு -
வலியை தரும் -
என்பது-
 தெரிந்தது!
பிரியமானவளை -
பிரிந்த போது!

எதிரியாக-
 பார்ப்பார்கள்-
 சிலர்-
அவர்களின் -
வீட்டை கடந்து -
செல்லும் போது!

அர்த்தம் -
புரிந்தது-
என் வீட்டில் -
'வயசுக்கு' -வந்த
பொண்ணு -
இருந்த போது!

தகப்பனின்-
 கோபம் -
புரிந்தது-
தான் -
உழைச்ச காசை-
வீணாக-
செலவழிச்ச போது!

நதியின் -
ஓட்டம் -
மேடு பள்ளத்தை -
கடக்கிறது!

வாழ்வின் -
ஓட்டம் -
பாடங்களை -
தருகிறது!

No comments:

Post a Comment