Monday 19 September 2011

முதிர் கன்னியின் கண்ணீர்....!

 ஓட்டை உள்ள -
குடிசையிலே!
ஒளி வருது -
ஓட்டையிலே!

இருளான -
என் வாழ்விலே!
ஒளி வீச போவது-
 யாராலே!

அப்பனுக்கு-
 நிம்மதி மதுவிலே!
பெத்தவளுக்கு-
 பொழுது போகுது -
ஊர் புரணியிலே!

தவளைகளுக்கு ௧
கல்யாணம் -
மழை வரும் -என்ற 'நம்பிக்கையிலே!'

என் நிலையை -
புரியத்தான் -
ஒரு நாயும் இல்ல!

காதல் -
பேசுவதுண்டு-
காளையர்கள் -
பார்வையிலே!

தாயம் ஆடிய எனக்கு -
'படி'தாண்ட முடியல!

பலருக்கு கழியுது -
இரவு இனிமையிலே!

எனக்கு ஏனோ -
கழியுது இம்சையிலே!

நாயை கூட -
'கட்டி'போடுவார்கள் -
இரவிலே!

'ஓடி'போயிட கூடாது -
என்பதாலே!

'கட்டி' கொடுப்பார்கள் -என்ற
நம்பிக்கையிலே!

என் இளமை கரையுது-
என் கண்ணீரிலே!

No comments:

Post a Comment