Monday 1 August 2011

குழந்தைகளே...!

 மழலைகளே...!
கற்று -
தாருங்களேன் !
உங்களது -
குணங்களை !

கள்ளங்கபடம்-
 இல்லாத-
வெள்ளை -
உள்ளத்தை -
என் நெஞ்சில் -
கொஞ்சம் -
ஊற்றுங்களேன்!

அணைப்பீர்களே!
அடித்த-
 அம்மாவையே!-
அந்த அன்பை -
அணு அளவாவது-
எனக்கு -
தாருங்களேன்!

அடி மேல் -
அடி விழுந்தாலும் -
அடி மேல் -
அடி வைக்கும் வரை-
அடங்க மாட்டீர்களே!-
அந்த-
அயராத -
குணத்தை!

திரும்ப திரும்ப-
 சொல்லியாவது -
"திருந்த" -
சொல்வீர்களே!-
அந்த-
திறன் வாய்ந்த -
குணத்தை!

சிடு சிடுத்து -
பார்ப்பவகளையும்-
சிரித்து பார்ப்பீர்களே!-
அந்த
சிறந்த-
 குணத்தை!

நீங்கள் கற்று -
கொள்வீர்கள் -
பெரியவர்களிடம்!

கற்று கொள்ளத்தான் -தெரியவில்லை -
பெரியவர்கள்-
உங்களிடம்!

No comments:

Post a Comment