Monday 1 August 2011

நண்பேண்டா........

 நண்பனானவன்-
கூட பிறக்காத -
பிறப்பானவன்!

வார்த்தைகளில் -
வரையறை உண்டு-
வார்த்து -
எடுத்தவளிடமும்!

வரையறை இல்லாமல் -வாழ்கையை-
பங்கிட்டு-
 கொள்ளலாம் -
நண்பனிடம்!

நட்பு!
புண்ணான -
மனசுக்கு -
களும்பாக-
 மாறும்!

காதலுக்கு-
 தூதாகும்-
காயத்திற்கு -
மருந்தாகும்!

கண்ணீரை -
துடைப்பான்-
கண் துடைப்புக்காக -
அல்ல!

காற்றில் -
அசையும் -
கண்மாய் -
தண்ணியை போல !

கஷ்டத்தின்போது-
 முந்தும்
கண்ணீரை -
போல!

துன்பத்தின் -
போது-
தோள் கொடுப்பவனே -
தோழன்!

நல் வழி படுத்தினால் -
தானே-
நண்பன்!

புன்னகை -
தர வேண்டிய -
உதட்டில் -
புற்று நோயை தரும் -
புகை இலையை -
வைப்பதா -
நட்பு!?

மனக்கஷ்டத்தில் -
வருபவனுக்கு -
மன நோயை தரும் -
மதுவை ஊற்றி -
கொடுப்பதா-நட்பு!?

'தவறும்போது'-
திருத்தணும்-
'தவறான'விஷயத்திற்கு -
அழைத்து -
செல்வதா !-
நட்பு!?

இவையெல்லாம் -
நட்பு அல்ல!
நடிப்பு எனலாம்!

உயிர் காப்பான் -
தோழன்-
என்பது -
முது மொழி!

நட்பு -
கொள்ளலாம் -
நட்பே கொல்லலாமா!?-இதுதான்-
எனது 'வலி'!

2 comments:

  1. அன்பின் சீனை - நட்பின் இலக்கணம் அருமை - கவிதை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete