Monday 4 July 2011

பெத்தவளும்! என்னவளும்!

கண்ணீரை -
மறைத்துக்கொண்டு -
கஷ்டங்களை -
மறைத்தவள்!
பெத்தவள்!

பிரிவை தந்து -
கண்ணீரை-
மட்டும் தந்தவள் -
என்னவள்!

என் தாய்!
சிற்பமாக -
செதுக்கினாள்-
ஒரு -
பாறாங்கல்லை!

என்னவளோ!
சிதறடித்து விட்டாள்-
சிதறு தேங்காயை -
போல்!

பெத்தவள்!
திட்டுவத்தின் மூலம் -
பள்ளம் தோண்டினாள்-
விதை என்னை -
மரமாகக!

என்னவள்!
குவித்த-
 மண்ணோ-
கோபுரம் -
செய்யவல்ல -
என்னை -
சமாதியாக்க!

கருவுலகிலும் -
சுவாசிக்க-
வைத்தாள்-
என் தாய்!

கலிவுலகிலும்-
மூச்சடைக்க-
வைத்தாள் !
என்னவள்!

நம்பி -
வளர்த்தாள்-
என் தாய்!

நம்பிக்கை -
இல்லாமல் -
என்னை -
பிரிந்தாள்!
என்னவள்!

ஆண்களின் -
கண்ணீரை -
வெளியிட்டாலும்-
வெட்கம்!

மறைத்தாலும் -
துக்கம்!

2 comments:

  1. என்ன சீனி.. வீட்டுல ஏதாவது பிரச்சனையா? மனம் நொந்து ஃபீலிங்கோடு எழுதுன மாதிரி தெரியுதே
    இது பொதுவாக நிறைய வீட்டுல நடக்கிற யதார்த்தம் அதைத்தான் அழகா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. asarath!

      ungaludaya karuthukkum-
      varavukkum mikka nantri!

      Delete