Monday 4 July 2011

இறைவா!

 மண்ணிலிருந்து-
மனிதனை -
படைத்தாய்!

உன்னிலிருந்து -
உடலில்-
உயிரை -
நுழைத்தாய்!

மண்ணால் -
படைக்கப்பட்ட -
மனிதனுக்கு -
மண்ணில் உணவை-
வைத்தாய்!

உன்னிலிருந்து வந்த -
உயிர் உரம் பெற-
உண்மையெனும் -
வேதம் தந்தாய்!

கண்களை -
படைத்தாய் -
கண்களில் -
ஒளியை வைத்தாய்!

மூடிக்கொள்ளவும்-
திறந்து கொள்ளவும் -
இமைகளை -
வைத்தாய்!

மூட -
திறக்க -
முடிவை -
மனிதனுக்கே -
கொடுத்தாய்!

பிறந்தவன் -
இறக்கவும்!
இறந்தவன் -
உயிர் பிக்கவும்-
செய்வாய்!

நன்மை,-
தீமை -
இரண்டையும்-
 வைத்தாய்!

எதை செய்வது -என்ற
முடிவை -
மனிதனுக்கே -
கொடுத்தாய்!

''இறுதி நாள் "-
"தீர்ப்பையோ''-
உன்னிடமே-
வைத்துக்கொண்டாய்!

வாழ்வென்பது-
எப்படியும் அல்ல!
இப்படி தான் -என
விளக்க-
வேதத்தை -
தந்தாய்!

பொன் மொழிகள் -
என்பார்கள் -
அறிஞர்கள் -
சொல்லை!

அவர்களுக்கு -
அறிவு கொடுத்த -
அருளாளா!
உன்-
அருமை -
என்னவென்று சொல்ல!

இறைவன் இல்லை -
என்பார்கள் -
ஒரு சாரார்!

இணை துணை -
வைப்பார்கள்-
ஒரு சாரார்!

இல்லவே இல்லை-
இறைவன் -
உன்னை தவிர -எனும்
சாராரிடம் எங்களை -சேர்ப்பாயாக!

இறைவா!
வணங்குகிறோம் -
உன்னையே!
நேர் வழியை -
வேண்டுகிறோம் -
உன்னிடமே!

No comments:

Post a Comment