Monday 4 July 2011

சோக கீதம்...!

 நான்-
 பிச்சை -
எடுக்கவில்லை!

சீட்டு எடுப்பதால் -
பெறுகிறேன்-
இரு 'நெல்'லை!

என் விதியோ -
என்ன வென்று-
தெரியவில்லை!

இதில்-
உன் விதியை -
நான்-
என்ன சொல்ல!?

பறந்து சென்று -
உணவை -
தேடி கொள்வேன்!

நானா!?
உங்களிடம் -
பிச்சை -
கேட்கிறேன் !

கை கூடி வருமா?
காதல் -என
கை நீட்டி -
கேட்கிறான்!

கட்டியவளை விட்டு -
ஓடி வந்த-
கயவனிடம்!

நானும் !
மனிதனும் -
சிறை பட்டு தான்-
இருக்கிறோம்!

நான் இருப்பது -
கூண்டு சிறை!

அவன் இருப்பது -
மடமை எனும் -
சிறை!

இரண்டறிவு உள்ள -
என்னிடம்!

எதிர் காலத்தை -
கேட்கிறான்-
ஆறறிவு உள்ளவன்!


-ஜோசிய கிளியின்
சோக கீதம்!

No comments:

Post a Comment