Monday 27 June 2011

எது நீ?

அன்பே,
எனக்கு-
 நீ,!
பால் வண்ண -
நிலவா!?
பாலை வன -
சுடு மணலா!?
எது நீ?

மஞ்சள் நிற -
சூரியனே!
உதிக்கும் போதும் !-
மறையும் போதும் ,!-
அதுவே -
உன் நிறமே!

எனக்கு-
 நீ !
தர போவது-
விடியலையா!?
அல்லது-
இருளையா!?
எது நீ?

மலர போகும் -
மொட்டே,!
நீ வெளியிட போவது-
நறு மணமா!?
அல்லது-
பூவின் நாகமா!?
எனக்கு-
எது நீ?

மழை தூறலே!
காய்ந்த -
பூமியின் மேல் விழுகிறாய் -
பூமியை குளிர செய்யவா !?அல்லது-
சட்டென்று நின்று -
பூமியை
சூடேற்றவா?

நீ !சூடா!?
குளிரா!?
எது நீ?

வருவாளே!
வருவாளே!-என்று
துடித்த மனதிற்கு
வந்தாயே வாளாக!

தன்னை காக்க வந்த-
போர் வாளா!?
அல்லது-
தண்டனை தர வந்த-
கொலை வாளா!?
எது நீ?

ஊர்வலமே!
ஊரும் உறவும் கூடி-
பூக்கள் சூடி-
நடக்கும் ஊர்வலம் !
எனக்கு நீ -
தர போவது-
மண விழா ஊர்வலமா!?
மரண ஊர்வலமா!?
எது நீ?

No comments:

Post a Comment