Thursday 23 June 2011

'''காலமாக ''' காத்திருக்கிறேன்!

ஆயுதங்கள் மிரட்டியது -
நாம் அஞ்சிடவில்லை !

வறுமை வாட்டியது -
நாம் வாடவும் இல்லை!


உறவுகள் உதறியது -நாம்
உடைந்திட வில்லை!

தேகத்தின் தேவை தீர்ந்த பின்னும் -நாம்
உறவை ''தீர்த்து ''கொள்ளவில்லை!

பிரியவே கூடாதென்று இருந்த -நாம்
பிரிந்தே இருக்கிறோமே!

மரணம் பிரிக்கவில்லையே!-
பிரித்தது நாம பெத்தபுள்ளைகளே!

சொத்தை பிரித்தார்கள் -
சொத்து சேர்த்து வைத்த -நம்மை ஏன்
பிரித்தார்கள் ''சொத்தை''கள்!

நாம ''சேர்ந்த ''தாலே -
பிறந்தவனுங்க !நம்மை
பிரிச்சி வச்சி டானுங்க!

உழச்ச சொத்தை
உருவுனானுங்க !
உன்னை விட்டு என்னை பிரிச்சி -
உசிரையுமே உருவிட்டானுங்க!

மூத்தவன் வீட்டில் -நானும்
இளையவன் வீட்டில் நீயும் !

பாக பிரி''வினை''போது -
பாசத்துக்கும் ''வினை''யாக -
அமைஞ்சது!

காதலுடன் -வாழ்தோம்
கவலையுடன் -வாழ்கிறோம்
''காலமான''பின்புதான் -சேர்வோமோ!

இப்படிக்கு,
முதுமையான முதியவர்.

No comments:

Post a Comment