Monday 27 June 2011

மனைவியானவள்...!

அழகிய கோலமாக்கினால்-
கோடுகளால் இணைத்து -
அலங்கோலமாக சிதறி கிடந்த
புள்ளிகள் என்னை!

நிலை கொள்ள செய்தாள்-
நாடு கடலிலும் நங்கூரமாக -
அலை கடலில் அலைக்கழிக்க பட்ட -
கப்பலான என்னை!

பொருந்தி கொண்டாள்-
வாழ்க்கையில் !
பொறுமை எனும் சொல்லை -
படிக்க கூட பொறுமை -
இல்லாத என்னை!

இருக்க முடியும் -ஒரு தாயிக்கு
இரு குழந்தைகள் !

இருக்க முடியாது-ஒரு பிள்ளைக்கு
இரு தாயிக்கள் !

எத்தனையோ பேர்களுக்கு -
எத்தனையோ தாய்மார்கள்!

அதெப்படி என கேள்வி வரும் -
இப்படி!

என்னை குழந்தையாக -
பெற்ற தாய்!
எனக்கு குழந்தையாக -
பிறந்த தாய்!

ஒதுக்கினார்கள் -என்னை
தராதரம் இல்லையென்று!

உண்டாக்கினாள்-தராதானமான
வாழ்கை ஒன்று!
என் தாரமானவள் இன்று!

இல்லை சந்தோசம் -வீட்டு
மனைகளினால்!
குறையாத சந்தோசம் -வீட்டில்
உள்ள மனைவிகளால்!

நேசியுங்கள் மனைவியை-
மனைவி ஆக்க திட்டமிட்டவர்களையே
நேசியுங்கள்!

No comments:

Post a Comment