Thursday 23 June 2011

நன்றி கடன்...!

 விரல் பிடித்து நடந்த -
கைகள்-
இன்று -
சுருக்கங்களால்!

ஓயாது நடந்த -
கால்கள்!-
இன்றோ!-
கிழிஞ்ச -
நார்களை போல்!

தளர்ந்த தாயே!
பாடு பட்டு-
 அடைச்சிடுவேன்-
பட்ட கடன் -
பணமா இருந்தா!?

எப்பாடு பட்டு -
அடைப்பேன்!-
என்தாயே!
பட்ட கடன் -
பாசமா இருந்தா!?

கருவின் வலியை-
அறிய-
எனக்கு -
வாய்ப்பில்லை!

காரணம் -
கர்ப்ப பை-
எனக்கில்லை!

என்ன புள்ள-
 பெத்தவளென!
என்ன வளர்ப்பு -
வளர்த்தவளென!
எத்தனையோ -
உனக்கு சொல்லடிகள்!

உச்சி முதல் -
உள்ளங்கால் வரை-
சொல்லடிகளை -
அடியா மாத்தி -
அடிச்சாலும்!

அடிகள் மிச்சமிருக்கும் -
உன் உடம்பில்-
 இடம் இருக்காது!

கடைசி காலத்தில் -
கஞ்சி ஊத்துரே -
பிள்ளைதானே-என்று-
கஷ்டமே தெரியாமல் -
வளர்த்தவளே!

உனக்கு -
கஞ்சி ஊத்த -
எந்த கஷ்டமும் -
நான் படுவேன்!

நன்றி செலுத்த-
 தெரியவில்லை-
ஒரு தாயின்-
 அன்புக்கு!

என்ன நன்றி -
செலுத்தி இருப்போம் -
எழுபது மடங்கு-
 அன்பு செலுத்தும் -
இறைவனுக்கு!?

2 comments:

  1. நல்ல வரிகள்,,
    நன்றி சொல்வோம்,,

    நன்றி!!

    ReplyDelete