Sunday 22 May 2011

மழலை அழுகையின் மொழி பெயர்ப்பு!

தகப்பன்மார்களே!

திராணி உழைப்பதற்கு
இல்லைஎன்றால் -உங்களுக்கெதற்கு
திருமணம்!?

தாய்மார்களே!

கூந்தல் குறைவுக்கு-
ஒட்டு முடி!

முக அழகை கூட்டிட-
மேக்கப்பு!

தாய் பாலுக்கு -இப்போ
புட்டி பால் !

பாசம் தர என்ன!-
பணி பெண்ணா!?

பெத்தவுடன் தீர்ந்து -
விட்டதா கடமை !

பாசத்தை ஊட்டாமல் -
ஊட்டசத்தை மட்டும் -ஊட்டி
வளர்ப்பது மடமை!

எங்களின் எதிர்கா லத்திற்கு -
உழைப்பதாக கூறுவது -
உங்களின் அறியாமை !

நிகழ்காலத்தை கொன்று விட்டால் -
எதிர்காலம்
எங்கே இருக்கு!

மழலைக்கு தேவை -
இனிப்பு கலந்த -
பசும்பாலல்ல !

பாசம் கலந்த -
தாய் பால் !

இப்போதைக்கு-
 எங்களுக்கு -
பாசம் தான் !

பணமல்ல....!

No comments:

Post a Comment