Monday 25 April 2011

ஒரு தாயிக்கு !

தாயே!
தாயோட காலடியில் தான்-
சொர்க்கம் என்பதே-
 நபி மொழியே!

என் காலின் -
"அடியை"-
வாங்கி இருக்கிறாயே!

குழந்தை பருவத்தில் -
நெஞ்சியிலும்!
வாலிப பருவத்தில் -
மூஞ்சியிலும்!

கோழியே!
குஞ்சு என்னை-
நீ!
 அடித்ததும் இல்லை -
மிதித்தும் இல்லை!

இந்த-
இரண்டையும் தவிர -
எதுவும் -
நான் உனக்கு -
செய்ததும் இல்லை !

ஊரார்-
சொல்வதுண்டு -
உன்னை -
நல்ல பிள்ளை -
பெத்தவள் என்று!

எத்தனை -
பேருக்கு தெரியும் -
ஒரு -
நல்லதாய்தான் -
என்னை பெற்றவளென்று!

நீ அழுதாய் -
என்னை திட்டி விட்டு -
புரியவில்லை -
அந்த கண்ணீரின்
அர்த்தம் அன்று !

புரிந்தபின் -
நீ !
என் அருகில் இல்லை-
இன்று!

வக்கும் இல்லை-
வசதியும் இல்லை -
உன்னை "-
"பொன்னகையுடன் "பார்க்க !

ஆனாலும் -
ஆசை கொள்கிறேன் -
உன்னை -
புன்னகையுடன்  பார்க்க!

No comments:

Post a Comment